தமிழகம் முழுவதும் 6144 போலீசாரை ஒரே நேரத்தில் பணியிடம் மாற்றம் செய்து சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு. இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தனது உத்தரவில்; தமிழகத்தின் ஆறாயிரத்து, நூற்று நாற்பத்து நான்கு (6144) காவலர்கள் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு TSP பட்டாலியன்களின் சிறப்புக் காவலர்கள் மாற்றப்பட்டு, நகரங்கள் / மாவட்டங்களில் உள்ள ஆயுதப் பாதுகாப்புப் பகுதிக்கு அனுப்பப்படுகின்றனர். ஹவில்தார்கள், நாயக்கர்கள் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் TSP பட்டாலியன்களில் இருந்து […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாடு முழுவதும் நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் […]
சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70,46,196 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42,78,808 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,728 […]
தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரரின் விருப்பத்தின்பேரில், அவரின் ஓய்வூதியத்திலிருந்து சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவரது துணைவர் உயிரோடு […]
யுஜிசி – நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. யுஜிசி நெட் தேர்வு 2022 இன் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளைப் பெற நீண்ட காலமாக காத்திருந்தனர், இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யுஜிசி நெட் முடிவுகள் வெளியானது குறித்து அதன் தலைவர் ட்விட்டரில், “யுஜிசி-நெட் […]
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் கார் விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில் பெண் மருத்துவர் மீது வழக்குப் பாய்ந்ததுள்ளது. டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சைரஸ், அவரது […]
மழையால் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை முதல் மழை பெய்து வருவதால் அன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். மழை பெய்யும் நாட்களில் மாணவர்களின் […]
குஜராத் மோர்பி பாலம் விபத்திற்குள்ளானதில் இறந்தவர்களில் குழந்தகள் மட்டும் 55 பேர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 500 பேரில் 135 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள. இதில் 55 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகதகவல்கள் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 1974ல் பிறந்தார். ஆதர்ஷ் வித்தியாலயாவில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னைபல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டைம்ஸ் பத்திரிகையில் சில காலம் பணியாற்றினர். பின்னர் வெளிநாட்டிற்கு சென்றார். […]
சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் , நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடி இடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் கம்பி […]