ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக […]

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. அதன்படி, திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, […]

பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன் உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல மலையாள-ஆங்கில கவிஞரும், நாவலாசிரியரும், வசன எழுத்தாளருமான டி.பி.ராஜீவன், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலையாள எழுத்தாளர்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ராஜீவன் சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி தனது 63வது வயதில் காலமானார். மதிப்புமிக்க கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட பல முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்றவர். இலக்கிய வட்டங்களில் […]

மரம் ஒன்றுதான் ஆனால், அதன் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு நன்மை அளிக்கும் மூலிகையாக நமக்கு உதவுகின்றது. கிராமப்பகுதிகளில் கிடைக்கும் கல்யாண முருங்கை எனப்படும் மரம்தான் அது… கல்யாண முருங்கையின் பூ, விதை, இலை, பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இதனை முள்முருங்கை என்ற பெயரும் உண்டு. கல்யாண முருங்கை இலைச்சாற்றை 5 மிலி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் […]

நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் செயலியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் முதல் தர்மபுரி, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் […]

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள். தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிகளுக்கு என 2748 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 22 முதல் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்ச […]

காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காற்றின் தான் மிகவும் மோசமாக மாறி வருகிறது இதனால் அரசு வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் செவ்வாய்கிழமை வரை 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை […]

காற்றின் குறியீடு மோசமானதால் டெல்லியில் டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி தலைநகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. மோசமான காற்று மாசுபாட்டுடன் தேசிய தலைநகரின் பல பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக மாறியுள்ளது. தலைநகரில் காற்றின் தரக் குறியீடு 364 ஆக மாறியுள்ளது. இது வரும் நாட்களில் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான காற்று மாசுபாட்டை அடுத்து, தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் […]

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் […]

பெங்களூரு கே.ஆர்.புரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மீது கிரேன் ஏறிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கே.ஆர்.புரத்தில் சிறுதொழில் செய்து வருபவரின் மகள் தனியார் கல்லூரியில் பி.காம்.இறுதியாண்டு படித்துவந்தார். நேற்று இறுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வை முடித்துவிட்டு அந்த மாணவி சாலை ஓரத்தில் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த ராட்சத கிரேன் ஒன்று மாணவி மீது ஏறி இறங்கியது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை […]