நாம் பொதுவாக ஆலங்கட்டி மழையைப் பார்த்திருக்கிறோம். சில பகுதிகளில், அரிதான சந்தர்ப்பங்களில், வானத்தில் இருந்து மீன்கள் விழுவதையும் பார்த்திருக்கிறோம். இவை மிகவும் அரிதானவை. இருப்பினும், அமெரிக்காவில், வானத்தில் இருந்து அதிக அளவில் மீன்கள் பொழிகின்றன. இதனால், அங்குள்ள மக்கள் இதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். வானத்தில் மீன்கள் இருப்பதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீர்நிலைகளின் மீது உருவாகும் சக்திவாய்ந்த சூறாவளிகளும் சுழல்களும் நீரிலிருந்து மீன்களை உறிஞ்சி தரையில் கொண்டு வருகின்றன […]

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மின்சாரம் பாய்ச்சிப் படுகொலை செய்த கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (43), டயர் கடை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், மதுவுக்கு அடிமையானதுடன், வீட்டில் […]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், மீண்டும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கடலோரக் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இந்த மீனவர்கள், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர். மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படை, கைதான 9 பேரையும் மேலதிக விசாரணைக்காக காரைநகர் கடற்படை […]

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.. 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு மு.க ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என நம்பித்தான் மக்கள் நடமாடுகிறார்கள்.. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என்று […]

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் […]

வயதான பிறகும் மற்றவர்களைச் சாராமல், நினைவாற்றல் இழப்பு இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கு விலையுயர்ந்த மருந்துகள் தேவையில்லை. நாம் தினமும் உண்ணும் உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். உலகம் முழுவதும் பிரபலமான உணவு முறைகளை ஆய்வு செய்த வல்லுநர்கள், ஒரு குறிப்பிட்ட உணவு முறை சிறந்த பலன்களைத் தருவதைக் கண்டறிந்துள்ளனர். 70 வயதிற்குப் பிறகும் நீங்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்க உதவும் இந்த உணவு […]

திருட்டு என்றாலே ​​​​நம் மனதில் முதலில் வருவது தங்கம், வெள்ளி, பணம் அல்லது விலையுயர்ந்த கைபேசிகள்தான். ஆனால் உண்மையில், இவைதான் உலகில் அதிகம் திருடப்படும் பொருட்கள் அல்ல. ஆம், உலகில் உள்ள திருடர்களின் பார்வை நாம் கற்பனை செய்யக்கூடிய மிகச் சாதாரணமாக ஒரு பொருளின் மீதுதான் இருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். அப்படியானால், அந்தப் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் குறித்து […]

கேரள மாநிலம் ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் கிளைகளுடன் இயங்கி வரும் ஃபெடரல் வங்கியில் (Federal Bank), தற்போது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன் சேர்த்து மாதம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது ஒரு நிரந்தரப் பணியிடமாகும். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழர்களின் வீரத்திற்கும், தொன்மைக்கும் சான்றாகத் திகழும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 2026-ஆம் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டுத் தமிழகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவிலான வாடிவாசல்களையும், காளைகளையும் கொண்ட மாவட்டமான புதுக்கோட்டை, இந்த ஆண்டின் முதல் போட்டியை நடத்தும் பெருமையைப் பெற்றுள்ளது. மாவட்டத்தின் பாரம்பரியமான தச்சங்குறிச்சி கிராமத்தில், புனித விண்ணேற்பு அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உற்சாகமாக தொடங்கின. இந்த வீர விளையாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு […]