கரூர் மாவட்ட அரசியல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்தப் பகுதியில், அக்கட்சியின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழா, கொங்கு மண்டல அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அதிமுக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ் சின்னத்திரையில் ‘மைனா’-வாக அறிமுகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நந்தினி. ‘சரவணன் மீனாட்சி’ தொடங்கி ‘விக்ரம்’ திரைப்படம் வரை தனது திறமையை நிரூபித்த இவர், சமீபகாலமாக தனது வியக்கத்தக்க உடல் மாற்றத்தால் இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், மிக குறுகிய காலத்தில் நந்தினியும் அவரது கணவர் யோகேஷும் இணைந்து மேற்கொண்ட உடல் எடை குறைப்புப் பயணம், பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. இன்டர்மீடென்ட் ஃபாஸ்டிங் மற்றும் […]
எடை குறைக்க முயற்சிக்கும் பலர், குறைவாக சாப்பிட்டால், தங்கள் உடல் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் பெரும்பாலான மக்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள். ஆனால், எடை குறைப்பதற்கான ஒரே வழி இதுவல்ல. ஏனென்றால், சிலர் ‘நான் எவ்வளவு சாப்பிட்டாலும், நான் எடை அதிகரித்துக்கொண்டே இருக்கிறேன்’ என்று புகார் கூறுகிறார்கள். எடை குறைக்க தங்கள் உணவை மாற்றுபவர்கள் குறைவாக சாப்பிடுவது பரவாயில்லை, ஆனால் அவர்கள் என்ன வகையான உத்திகளைப் பின்பற்ற […]
நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் கடுமையான உட்கட்சி பூசல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிலவிய அசாதாரண சூழல், கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட சில அதிரடி அறிவிப்புகள், பல மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் கனவில் இடியை பாய்ச்சியுள்ளது. இந்தக் […]
ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த சூரிய பிரபா (25), தனது கணவர் விவேக் மற்றும் 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது மேலாளர் சிவேஷ் ஷர்மாவுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். அலுவலக வேலை என்ற போர்வையில் தனது கணவரை ஏமாற்றி வந்துள்ளார். விவேக் ஒருமுறை தற்செயலாக அலமாரியை சோதித்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பாலியல் உபகரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள் தான். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மலர் சந்தைகள் இப்போதே ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களுக்கான தேவை உச்சத்தை தொடும் நிலையில், இத்தனை கோடி மலர்கள் எங்கிருந்து வருகின்றன? இது இறக்குமதியா அல்லது உள்நாட்டு உற்பத்தியா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உண்மை என்னவென்றால், ரோஜா உற்பத்தியில் இந்தியா ஒரு […]
சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக […]
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அடிமை என்று முத்திரை குத்தும் திமுகவினர், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்களை அடகு வைத்துவிட்டு அடிமையாக செயல்படுவது யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகள் யாரும் ஆட்சியில் பங்கு கோரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக […]
பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்கு, சக்கரமும், அவரின் கருணை பொங்கும் முகமும்தான். ஆனால், சிவபெருமானைப் போலவே தனது திருமுடியில் பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டு, பக்தர்களுக்கு அபயமளிக்கும் ஒரு அதிசய திருக்கோலம் தமிழகத்தில் உண்டு. 108 திவ்ய தேசங்களில் 25-வது திருத்தலமாகப் போற்றப்படுவது ‘தலைச்சங்காடு’. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட எண்ணற்ற சங்குகளில், மகாவிஷ்ணுவின் கையில் குடிகொண்டிருக்கும் “பாஞ்சஜன்யம்” என்னும் தலைசிறந்த சங்கு அவதரித்த இடமே இதுவாகும். அதனால்தான் இந்த […]
நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டாலும், அந்த வழிபாட்டின் பலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய குலதெய்வம் இன்றியமையாதது. வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தடைகள், எதிர்பாராத அசுப நிகழ்வுகள் மற்றும் மனக்கவலைகளுக்கு குலதெய்வத்தின் அருள் குறைபாடே முக்கிய காரணமாக ஆன்மீக பெரியோர்களால் சொல்லப்படுகிறது. அத்தகைய குலதெய்வத்தை நம் இல்லத்திலேயே நிரந்தரமாக குடியிருக்க செய்யவும், அவர்களின் முழுமையான ஆசியை பெறவும் சில எளிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குலதெய்வக் கோவிலுக்குச் […]

