மெட்டா நிறுவனம், மே 20 முதல் ஒரு பெரிய அளவிலான ஆட்குறைப்பைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இது 2026-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பரந்த அளவிலான ஆட்குறைப்பின் முதல் கட்டமாகும்.. வேகமாக மாறிவரும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) மீதான செலவினங்களை நிறுவனம் அதிகரித்து, தனது செயல்பாடுகளை மறுசீரமைத்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் சுமார் 10% பணியாளர்கள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் ” செங்கோட்டையன் மிகவும் திமிர் பிடித்தவர்.. அதிமுகவினர் நல்ல சட்டை போட்டால் கூட செங்கோட்டையனுக்கு பிடிக்காது.. அவர் மோசமான குணம் கொண்டவர்.. செங்கோட்டையன் […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]
ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுக்கும் செயல்முறை, இதுவரை ஒரு நீண்ட காலதாமதமான நடைமுறையாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை முழுமையாக மாறப்போகிறது. EPFO (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) ‘EPFO 3.0’ எனப்படும் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. இந்த புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்தால், PF பணத்தை எடுப்பது என்பது வங்கிப் பரிவர்த்தனைகளைப் போலவே […]
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமாக இருப்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. விலையுயர்ந்த மருந்துகளையும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் விட, நம் வீட்டுத் தோட்டத்திலுள்ள துளசியும், சமையலறையிலுள்ள தேனும் நம் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அற்புதங்களை நிகழ்த்துகின்றன. ஆயுர்வேதத்தின் படி, துளசி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். தினமும் காலையில் எழுந்ததும் இந்தக் கலவையை அருந்துவது, உடலுக்கு ஒரு இயற்கையான நச்சு […]
இந்தியா தனது எல்பிஜி தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து வரும் எரிவாயு டேங்கர்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்திதான் மிகக் குறுகிய மற்றும் குறைந்த செலவிலான முக்கிய வழித்தடமாகும். இந்த வழித்தடம் தடைபட்டதால் எல்பிஜி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில், நமக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.. ஈரான் சமீபத்தில் ஹோர்முஸ் […]
அட்சய திரிதியன்று தங்கம் வாங்கும் வழக்கம் இந்தியர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தாலும், சமீப ஆண்டுகளில் இந்தப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலர் இப்போது தங்கத்தை விட ரியல் எஸ்டேட்டில் (மனை மற்றும் வீடு சார்ந்த சொத்துக்களில்) முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், இது வெறும் சுப நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவாக இல்லாமல், முழுமையான சிந்தனையுடனும் திட்டமிடலுடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பாரம்பரியமாக, […]
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கான விலக்கை அமெரிக்கா நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா சமீபத்தில் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நாடுகள் தொடர்ந்து வாங்குவதற்கு அனுமதிக்கும் தடைகள் விலக்கைப் புதுப்பித்துள்ளது.. மேலும், இந்தத் தளர்வை […]
800 years old.. 16-bar lingam! A miraculous place where Siddhas worship at night.. Do you know where it is..?
மகளிர் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா சமீபத்தில் லோக்சபாவில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த மசோதா பெண்களுக்கு சட்டமன்றங்களில் அதிகமான இடத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் மொத்தம் 489 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், 211 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மகளிர் இட […]

