“உண்மையான காதலன் ஒருபோதும் தனது காதலியின் அந்தரங்கப் படங்களை எடுத்து, அவளை மிரட்ட மாட்டான்” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி என்ன..? காதலிப்பதாக கூறி ஒரு பெண்ணுடன் பழகிய நபர், அந்தப் பெண்ணின் நம்பிக்கையை பெற்று நெருக்கமாக இருந்துள்ளார். அந்த தருணங்களை பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் படங்களையே ஆயுதமாக மாற்றியுள்ளார். நான் சொல்வதற்குக் கட்டுப்படாவிட்டால் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]
பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்மணி, தனது 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். படிப்பு தேவைக்காக தனது மகளுக்கு அவர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் தனது காதலனுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தாய், கண்டிக்கும் விதமாக மகளின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த செல்போனை சரிபார்த்தபோது, அதில் இருந்த காட்சிகளை கண்டு அவர் நிலைகுலைந்து போனார். அந்த இளம்பெண், […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்த முருகன்-ரேவதி தம்பதியின் மகள் கௌசல்யா (20). ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த இவருக்கும், அவரது முறை பையனான ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மணவாழ்க்கை தொடங்கிய சில காலத்திலேயே கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, ராஜேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், […]
எண் ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு குபேர பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் உண்டு. அவர்கள் மிக இளம் வயதிலேயே பணம் சம்பாதித்து செல்வந்தர்களாகி விடுகிறார்கள். எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த மாதத்திலும் 1, 10, 19, மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். […]
மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான சமூக வலைதள விமர்சகர் ஷாமிக் அதிகாரி, பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘நான்சேன்’ (Nonsense) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது சமூக வலைதளப் பக்கங்கள், அரசியல் நையாண்டிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கு எதிரான காரசாரமான விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றவை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வந்த […]
தமிழக பத்திரப்பதிவு துறையில் பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு முக்கிய நிர்வாக மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள 580-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட 100 அலுவலகங்களில் மட்டுமே வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் ஆவணப் பதிவு மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அலுவலக வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசரத் தேவைக்காக வார நாட்களில் வர முடியாதவர்களுக்கு இத்திட்டம் […]
மேற்கு வங்க மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேற்கு வங்க சிறப்பு விசாரணை அறிக்கை (SIR) மீதான விசாரணையின் போது, இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், சிறப்பு விசாரணை அறிக்கைச் செயல்பாட்டில் எந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார். தேவைப்படும் இடங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், ஆனால் எந்தத் தடைகளும் […]
தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பாஜக வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை குறித்த விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. அண்மையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக விலகியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பதவி விலகல் சாதாரணமான ஒன்றா அல்லது தலைமைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலா என்ற சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தச் சூழலில், இன்று காலை சென்னை […]
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்பது தற்காலத்தில் ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின்படி, வயது வித்தியாசமின்றி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரிடமும் நீரிழிவு பாதிப்பு மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் போதிய உடலுழைப்பு இல்லாத நவீன வாழ்க்கை முறையும், சத்துக்கள் குறைந்த உணவுப் பழக்கங்களுமே முதன்மைக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. சர்க்கரை நோய் உறுதியானவுடன் பலரும் […]

