தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை […]

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாகப் புற்றுநோய் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. 2021-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 15,000 புற்றுநோய் இறப்புகள் பதிவாகியுள்ளன. புற்றுநோய் என்பது உடலின் செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து, உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும் ஒரு நிலையாகும். சுற்றுச்சூழல் மாற்றங்கள், வாழ்க்கை முறை மற்றும் பரம்பரை காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றங்களே புற்றுநோய்க்குக் காரணமாக அமைகின்றன. ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் திசுப் பரிசோதனைகள் (biopsies) மூலம் இந்நோய் கண்டறியப்படுகிறது. அறுவை […]

ஈரானில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளின் காரணமாக, உலகம் முழுவதும் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன. எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியாவைப் போன்ற நாடுகள் இதனால் கவலையடைந்துள்ளன. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, ஒரு நாடு மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை. அது எந்த நாடு? அதற்கான காரணம் என்ன? உலகம் முழுவதும் எண்ணெய் பற்றாக்குறையைச் சந்தித்தாலும், ஐஸ்லாந்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாது. ஐஸ்லாந்தின் தனித்துவம் என்னவென்றால், அதன் மொத்த மின்சாரத் தேவையில் 85% முதல் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. எப்போதும் போலவே நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 234 […]

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்பவர்கள் இனிமேல் இரட்டிப்புச் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். 15 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்தத் தவறினால், அந்த வாகனத்தின் மீதும், அதன் போக்குவரத்தின் மீதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தப் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதுடன், கட்டணம் செலுத்தத் தவறியவர்களுக்கு மின்னணு அறிவிப்புகளை (e-notices) அனுப்பவும் முடிவு செய்துள்ளது. […]

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் […]

மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், பலர் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர் மற்றும் பல்வேறு பழச்சாறுகளை அருந்துகின்றனர். குறிப்பாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலை நீரேற்றத்துடன் (hydrated) வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் (மின்பகுளிகள்) நிறைந்துள்ளதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கவும் இது உதவுகிறது.. எனினும், இளநீர் உடலுக்கு […]

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது.. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க […]