கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. அண்ணன் பிண்டுவை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது தம்பி ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிண்டு (35), தனது மனைவி பிரபாவதி (30), நான்கு குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் (20) ஆகியோருடன் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து […]

அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பலை […]

கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைப் பற்றிய சுவாரசியமான கருத்தை சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பேசப்பட்டும் நிறைவேற்ற முடியாமல் போன சில முக்கிய பணிகள், தற்போது விஜய் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய பிரபாகர், தமிழகத்தின் முக்கியமான தேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எடுத்த […]

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் காசர்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 70 வயதான அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரை இழந்த வேதனையில் இருந்த தம்பிக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பட் (70). அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது […]

வீட்டில் செய்யும் குழம்புக்கும், உணவகத்தில் பரிமாறப்படும் குழம்புக்கும் சுவையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த சுவைக்கு எந்த ஒரு ரகசியப் பொருளும் காரணம் இல்லை. வெங்காயத்தை சரியாக வதக்குவது முதல் மசாலாவை பொறுமையாக சமைப்பது, தண்ணீரின் அளவை சரியாகக் கையாள்வது வரை ஒவ்வொரு சமையல் முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறிய நுட்பங்களை சரியாகப் பின்பற்றினால், வீட்டிலேயே உணவக பாணியில் மணமும் சுவையும் நிறைந்த […]

அரசியல் தலைவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அமைச்சரவைக் கொண்ட இந்த நாட்டில், தற்போது இந்த ஊதிய உயர்வு 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அடிப்படை ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்) 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (27 […]

பிரிட்டனின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான (NATS) விமானச் செயலாக்க முறைமையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமானப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, இங்கிலாந்து முழுவதும் 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்களும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 132 விமானங்களும் மற்றும் பல்வேறு […]

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ் (5 இடங்கள்), விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்தது. இந்நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (செப். 9) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் […]

பெருவெள்ளத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நேபாள நாட்டில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 9:38 மணியளவில் பதிவானது. காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 196 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 143 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-சீனா எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகத் திரிசூலி பள்ளத்தாக்கில் […]

குழந்தை பிறந்த பிறகு, பால் கொடுப்பது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக பால் குடித்த பிறகு குழந்தை அழுவது, உடலை நெளிப்பது அல்லது அமைதியின்றி இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பால் குடிக்கும் போது குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும் காற்றும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், பால் கொடுத்த பிறகு குழந்தையை ஏப்பம் விடச் […]