தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை, மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கள்ளக்காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சாலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (42). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு […]
ராய்பூரில் 16 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை, அத்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் மூன்று மகள்களும் தந்தையின் பராமரிப்பில் இருந்த […]
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி என்பவர், அதே பள்ளியில் பயிலும் இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொந்தமல்லிப்பள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இக்கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்கள் இருவரின் ஆடம்பரச் செலவுப் பழக்கம் மற்றும் அவர்களின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து முதல்வர் ரூபா ரெட்டி கண்டித்துள்ளார். […]
பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண், தனது 4 வயது மகனையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி […]
சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இனி இதுபோன்ற கருத்துகளை பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது மீண்டும் உளமாற வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தன்னை எதிர்த்து வழக்கு தொடர்ந்த […]
தோல் புற்றுநோயான மெலனோமாவுக்கு எதிராக மாடர்னா (Moderna) மற்றும் மெர்க் (Merck) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மெர்க்கின் புகழ்பெற்ற நோய் எதிர்ப்புச் சிகிச்சை மருந்தான கேய்ட்ருடா (Keytruda) உடன் இந்த புதிய mRNA தடுப்பூசியைச் சேர்த்து வழங்கியபோது, நோயாளிகளிடம் மிகச்சிறப்பான பலன்கள் கிடைத்துள்ளன. முக்கிய அம்சங்கள்: இக்கட்டப் பரிசோதனையில் (INTerpath-001) அறுவை […]
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி அவர்களுக்கு கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னையில் உள்ள தனியார் […]
தெலுங்கு திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகர் ஈஸ்வர் சாயைச் சுற்றி தற்போது பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. திருமணமாகி மகன் இருக்கும் நிலையில், சக நடிகையுடன் அவர் தனியறையில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ‘பசிங்கா பாலலு’ உள்ளிட்ட நாட்டுப்புற பாடல்கள் மூலம் தெலுங்கு மாநிலங்களில் பிரபலமானவர் ஈஸ்வர் சாய். ஆல்பம் பாடல்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள இவர், ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். […]
ஆரஞ்சு பழம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் தன்மைதான். ஆனால், ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமின்றி நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட் மற்றும் அதிக அளவு நீர்ச்சத்தும் உள்ளன. இதனால், ஆரோக்கியமான உணவுமுறையில் ஆரஞ்சு பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடிப்பதைவிட, முழு பழமாக சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்தை அதிகமாக பெற முடியும். இந்த நார்ச்சத்து […]

