தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவடைந்துள்ளதை சாதகமாக்கி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் உற்பத்தி தட்டுப்பாட்டினால் ஆவின் நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ பாலிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருவதுடன், அந்த சுமையை நுகர்வோர் தலையில் சுமத்தியுள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா, பால் […]

அமெரிக்க தொழில்நுட்பத் தொழில்முனைவோர் பில்கேட்ஸ் பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தனது கடந்த கால தொடர்புகள் குறித்து, கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், தாம் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுவனத்திற்குள் நடைபெற்ற ‘டவுன் ஹால்’ கூட்டத்தில் பேசிய பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தது “மிகப் பெரிய தவறு” என்றும், அந்த உறவு […]

மத்திய – மாநில அரசுகள் இணைந்து பொது விநியோக திட்டத்தில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளை தடுத்து, தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன. புதிய விதிகளின்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு […]

பிப்ரவரி 26 ஆம் தேதி புதன் வக்ரமாக இருப்பார். ஜோதிடத்தின்படி, அறிவு, அறிவு, வணிகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் கிரகமாகக் கருதப்படும் புதன், அதன் போக்கை மாற்றும்போது, ​​அதன் விளைவு பன்னிரண்டு ராசிகளிலும் காணப்படுகிறது. இருப்பினும், இந்த முறை புதன் வக்ரமாக நுழைவது மூன்று குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இந்த வக்ரமாக இருப்பதன் மூலம், சிலர் வாழ்க்கையில் அற்புதமான வெற்றிகளையும், அறிவில் […]

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பலர் கிரெடிட் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வங்கிகள் கிரெடிட் கார்டுகளில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைக் குறைத்து வருகின்றன. எந்த கார்டுகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம். கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வங்கிகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கேஷ்பேக்குகள், தள்ளுபடிகள் மற்றும் வெகுமதி புள்ளிகளைக் குறைத்துள்ளன. கார்டுகளில் […]

NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார். ” நீதிமன்றத்தை அவமதிக்க யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். சட்டம் அதன் போக்கில் செல்லும்,” என்று தலைமை நீதிபதி கூறினார். மூத்த வழக்கறிஞர்கள் […]

சாதாரண காய்ச்சல் முதல் தீராத இருமல் வரை எது வந்தாலும், நம் வீடுகளில் முதலில் தடை விதிக்கப்படுவது வாழைப்பழத்திற்குத்தான். “வாழைப்பழம் சாப்பிட்டால் சளி அதிகமாகும்” என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? இது குறித்து அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கும் விளக்கங்களை இங்கே விரிவாகக் காண்போம். மருத்துவ அறிவியல் கூறுவது என்ன..? சஃப்தர்ஜங் […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் நர்மதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நர்மதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது தோழி வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர், மர்மமான முறையில் மாயமானார். இந்நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி ரங்கம்பாளையம் புறவழிச்சாலையில் தலையில் கல்லைப் போட்டு […]

2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் விடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. எரிவாயு சிலிண்டர் விலை முதல் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் முறை வரை, இந்த மார்ச் மாதம் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் : வழக்கம் போல மாதத்தின் முதல் […]