இமயமலையின் பனி மூடிய சிகரங்களுக்கு மத்தியில் ஒரு சுனாமி போன்ற பேரழிவு உருவாகி வருகிறது. இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு வேகமாக அதிகரித்து வருவதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் தெவித்துள்ளனர்.. ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ரவீந்திர குமார் மற்றும் சௌரப் விஜய் ஆகியோரின் இந்த ஆராய்ச்சியின்படி, உயர் மலை ஆசிய (HMA) பிராந்தியத்தில் உள்ள இந்த ஏரிகளின் பரப்பளவு 2016 மற்றும் 2024-க்கு […]

எடையைக் குறைக்கும் விஷயத்தில், பலர் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் கடுமையாகக் குறைப்பது, உணவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைவாகச் சாப்பிடுவது போன்றவையே சரியான அணுகுமுறை என்று நினைக்கிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுவதில்லை. மாறாக, இது ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல் பலவீனம் மற்றும் சில நேரங்களில் எடை அதிகரிப்புக்கு கூட வழிவகுக்கும். சரியான அணுகுமுறை என்பது சமச்சீர் உணவோடு சரியான அளவு கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதே ஆகும். […]

கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]

பஞ்சப் மாநிலம் ஜலந்தரின் மாடல் டவுனில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் லக்கி ஒபரோய் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்கி தனது அன்றாட வழக்கப்படி இன்று காலை 8:15 மணிக்கு குருத்வாராவுக்குச் சென்றிருந்தார். அவர் குருத்வாராவுக்கு வெளியே இருந்தபோது, ​​ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு […]

மணிப்பூரின் சுராசந்த்பூரில், நெம்சா கிப்கென் மற்றும் லோசி திக்கோ ஆகியோர் மாநிலத்தின் துணை முதல்வர்களாகப் பதவியேற்றதற்கு எதிராக பாதுகாப்புப் படையினருக்கும் கும்பலுக்கும் இடையே புதிய வன்முறை வெடித்தது. நேற்று, எம்.எல்.ஏ. நெம்சா கிப்கென் பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வராகப் பதவியேற்றதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துய்போங் பஜார் அருகே கூடி, டயர்கள் உட்பட குப்பைக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்குத் தீ வைத்தனர். ஆத்திரமடைந்த […]

நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சமூக ஊடகங்களை இடைவிடாமல் ஸ்க்ரோல் செய்வதும், தகவல்களுக்காக கூகிளில் தேடுவதும் நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இருப்பினும், இந்த பழக்கம் நமது மூளையை வேகமாக முதுமையடையச் செய்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி எச்சரிக்கிறது. வெறும் 2 வாரங்களுக்கு இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் மூளையின் செயல்பாட்டை 10 ஆண்டுகள் பின்னோக்கித் திருப்பி, அதை மேலும் சுறுசுறுப்பாக […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்திய ரயில்வேயில் உள்ள RAC டிக்கெட் கட்டணங்கள் மற்றும் அதிவேக ரயில்களின் வகைப்பாடு குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதியை ஒதுக்காமல் பயணிகளிடம் முழு கட்டணத்தையும் வசூலிப்பது நியாயமற்றது என்று அது திட்டவட்டமாகக் கூறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது அறிக்கையில் இந்தக் குழு இந்த விஷயங்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே தற்போது பின்பற்றும் விதிமுறைகள் பயணிகளுக்குச் […]

உத்தரப்பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் மாமனாரையே மருமகள் கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ராஜ்பர் என்பவரின் கணவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் இல்லாத நேரத்தில் பிங்கிக்கும், ராம்மிலன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் ரகசிய தொடர்பை அறிந்த பிங்கியின் மாமனார் சுபச்சன், மருமகளின் […]