இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.. இது இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்றும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வு அமெரிக்காவை கலக்கமடையச் செய்ததாகத் தெரிகிறது. […]

கமல் அரசியலில் உலகநாயகனாக மாறுவார் என நினைத்தால் நகைச்சுவை நாயகனாகிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசியிருந்தார்.. மேலும் ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என டிவியை உடைத்த உலகநாயகன் கடைசியில்  இந்த நிலையில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினேகன் “ எந்த கேட்டகரியில் செல்லூர் ராஜுவை சேர்ப்பது என தெரியவில்லை.. எப்போதுமே அரசியல் […]

சென்னை விமான நிலையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பொஅட்டது.. தீ விபத்தால் ஏற்பட புகை சர்வதேச விமானங்கள் புறப்படும் பகுதியை சூழந்ததால் பரபரப்பு நிலவியது.. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. […]

சமீபத்தில், ஒரு ஷார்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பனி சூழ்ந்த அண்டார்டிகா பகுதியில், ஒரு சிறிய பென்குயின்தனது கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக நடந்து செல்கிறது. கடலை நோக்கிச் சென்றிருக்க வேண்டிய அந்தப் பெங்குயின், அதற்கு நேர் எதிர் திசையில் உள்ள பனிப்பாறைகளை நோக்கி நடந்து சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தக் காட்சி மிகவும் மெதுவாக இருக்கிறது. அதில் எந்த அவசரமும் இல்லை. அந்தப் பென்குயின்திரும்பிப் பார்க்கவில்லை. அது […]

AI (செயற்கை நுண்ணறிவு) சாட்போட்களை அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு மனஅழுத்தம் ஏற்படும் அறிகுறிகள் 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக JAMA Network Open என்ற அறிவியல் இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. “தினசரி ஏ.ஐ. பயன்பாடு பொதுவாகவே அதிகமாக உள்ளது; மேலும் அது மனஅழுத்தம், கவலை (Anxiety), எரிச்சல் (Irritability) போன்ற எதிர்மறை மனநிலை அறிகுறிகளுடன் கணிசமான தொடர்பு கொண்டுள்ளது,” என்று இந்த ஆய்வை வழிநடத்திய மனநல மருத்துவர் […]

சமீப காலங்களில் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, வேலை அழுத்தம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன. நாம் உண்ணும் உணவில் சரியான கவனம் செலுத்தினால் மட்டுமே, இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது. மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க, எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது இதயப் பிரச்சனைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க […]

தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். ஆனால் பல நாடுகளில், ஆண்களை விட பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த பாகுபாடு வளர்ந்த நாடுகளிலும்கூட தொடர்கிறது. இருப்பினும், ஐரோப்பாவில் உள்ள இந்த ஒரு நாட்டில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் ஐரோப்பாவின் ஒரே நாடு லக்சம்பர்க் ஆகும். இது பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற அனுமதிக்கிறது. சராசரியாக, […]

தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]