ரயில்வே ஊழியர் ஒருவர் இறந்த பின், அவர் தத்தெடுத்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தெற்கு கிழக்கு ரயில்வே தாக்கல் செய்த மனுவை, ஒடிசா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்சித் கிருஷ்ண ஸ்ரீபாத் மற்றும் சிபோ சங்கர் மிஷ்ரா அமர்வு “இந்து மதத்தில் மகன் இல்லாதவர் சொர்க்கம், முக்தி, […]

ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு […]

அமெரிக்காவின் மிக உயர்ந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் “அழிவு நாள் விமானம்” (Doomsday Plane) எனப்படும் விமானம், இந்த வாரம் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முன் தோன்றியது. இது, அணு யுத்தம் போன்ற பேரழிவுகளையும் தாங்கும் வகையில், பனிப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வான்வழி கட்டுப்பாட்டு மையமாகும். இந்த விமானம் Boeing E-4B Nightwatch என அழைக்கப்படுகிறது. அது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியது. இது, அதன் 51 […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நேற்று […]

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் நாளை கனமழை பெய்யும் என்றும் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ வேகத்தில் […]

வெள்ளிக்கிழமை, ஈரானில் மக்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களை அடக்க அரசாங்கம் நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கிய நிலையில், இந்த ஒடுக்குமுறையால் ஏற்கனவே பல டஜன் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில், வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது என்பதற்கான கோபமே இந்த இயக்கத்தின் காரணமாக இருந்தது. […]

இந்திய அரசு 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]

தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘ திராவிட பொங்கல் விழா’ கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.. அதன்படி திமுக சார்பில் மாவட்டம் தோறும் மாவட்டம் தோறும் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் […]

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் ஒரு நற்செய்தி. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டேக்குகளை வழங்குவதற்கான ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்-KYV’ செயல்முறையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இது ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகும் கூட, பல மணிநேர பின்தொடர்தல் மற்றும் தொந்தரவுகளுக்கு வழிவகுத்தது. இப்போது, […]