fbpx

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள முள்ளங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (4)0 இவர் பிளம்பிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சந்தியா (34).  இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 10 வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் குழந்தை இல்லாத …

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைப்பட துறையைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய திரைத்துறையில் மிக பிரபலமானவரும் வில்லன் நடிகருமான நடிகர் பிரகாஷ் ராஜ் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

கொரோனாவுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். அரசாணை 354-ஐ 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த …

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல பெற்றோர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் …

சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை …

தமிழகத்தில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகலில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக …

ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அங்கு தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி …

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”10 ஆண்டு கால …

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர், கர்ப்பமாக இருந்தது விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கருவுற்ற சிறுமி தான் ஏழ்மையில் சுழல்பவள் …

மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் …