கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சமையலில் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை நிலவரம் தான் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாத பட்ஜெட்டை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து உணவுகளிலும் இவற்றுக்கு முக்கிய இடம் இருப்பதால், காய்கறி சந்தைக்குச் செல்வோர் மற்ற பொருட்களை வாங்கினாலும் இந்த இரண்டையும் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது […]
திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், ஆட்சிக்கு வந்தப் பிறகு 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, முதலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, […]
அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இதன் தாக்கத்தால் அக்டோபர் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு […]
உலகப் பொருளாதார நிலை மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலையில் நேற்று (அக்டோபர் 24) மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்றைய காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டிருந்த தங்கத்தின் விலை, மாலையில் திடீரென சரிவை சந்தித்தது. ஒரே நாளில் சுமார் 75 அமெரிக்க டாலர்கள் […]
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.இந்த 21 மாதகால பகுதி நேர படிப்பில் சேரும் பணிபுரிவோர் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் […]
இந்தியப் பாரம்பரியத்தில் தங்கம் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளாக மங்களகரமான சின்னமாக விளங்கும் தங்கம், திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத அங்கமாகவும், சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கிய ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இருப்பினும், தற்போது நிதி மற்றும் தொழில் துறை நிபுணர்கள், எதிர்காலத்தில் துத்தநாகம் (Zinc) என்ற உலோகம் தங்கத்தை விட அதிக மதிப்புமிக்கதாகவும், அதிக தேவை உள்ளதாகவும் மாறக்கூடும் என்று கணித்துள்ளனர். […]
நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு […]
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான புதிய உதவி எண்ணை அறிவித்துள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடிமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கும், ஆதரவு சேவைகளை அணுகுவதற்கும் ஏதுவாக, போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான கட்டணமில்லா உதவி எண்ணில் மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போதுள்ள 14408 என்ற எண்ணுக்கு பதிலாக புதிய உதவி எண் 1515, […]

