`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது. இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும். ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? பீகார் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு […]
2025-26-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைனில் https://tnmedicalselection.net என்ற இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் […]
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. இந்த ஆண்டு […]
திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; […]
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 […]
வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் […]
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் இன்று அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]
பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும். அந்த கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் பைரவர் வழிபாடு தமிழகத்தில் பெரும் பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் இரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி […]
வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் […]