ராணுவத்தில் ஆண்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் ஒரு காலம் இருந்தது. எல்லையில் எதிரிகளை எதிர்த்துப் போராட ஆண்களால் மட்டுமே முடியும் என்றும், வீட்டை நிர்வகிப்பது பெண்களின் வேலை என்றும் நம்பப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் மக்களிடையே இந்தக் கருத்து மாறியது, இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில், பெண்கள் இராணுவத்தில் தங்கள் பங்கை வகிக்கின்றனர். உலகின் மிகவும் சர்வாதிகார நாடான வட கொரியாவில்தான் ராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர் என்பதை அறிந்தால் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சேலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 25 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி போன்றவற்றால், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் […]
தமிழ்நாட்டில் இந்தாண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தண்டு கல்வி விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நேற்று (மே 30) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், […]
வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை மின்-வணிக தளங்களில் சட்டவிரோதமாகப் பட்டியலிடுதல் மற்றும் விற்பனை செய்வதைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-2025என்பதை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, சட்ட நிலை குறித்து தவறாக வழிநடத்தக்கூடிய மற்றும் சட்ட அமலாக்க மற்றும் அவசரகாலச் சேவைகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் தொடர்பு […]
உலகம் முழுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவது பற்றி பேசப்பட்டாலும், சில இடங்களில் பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காகப் போராடி வருகின்றனர். ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்கள் வெளியே சென்று சுதந்திரமாக தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள், இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வேறு சில நாடுகளிலும் இதுதான் நிலைமை. உலகில் பெண்கள் மட்டுமே ஆட்சி செய்யும் ஒரு இடத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இங்கு ஆண்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் […]
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என்னுடைய தவறு என்றும் அவருக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். அதேபோல், பாமக-வில் முகுந்தனை நியமித்தபோது, தாயார் மீது அன்புமணி பாட்டில் வீசித் தாக்கியதாகவும், பாஜகவுடனான கூட்டணிக்காக […]
ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4 FY25) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது, இது கடந்த நான்கு காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும். அதே நேரத்தில், 2025 நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் […]
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். […]
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக […]
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலையில் இருந்து 31.03.2025-ம் தேதியோ அல்லது அதற்கு முன்ன்னதாகவோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான திருமணத் துணைவர் ஏற்கனவே கோரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட ஆறு மாத தகுதிவாய்ந்த […]