மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் – கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு […]

இந்தியாவின் திருத்தல மரபில், ஒவ்வொரு சிவஸ்தலமும் தனித்துவமான வரலாறையும் ஆன்மிக மகிமையையும் தாங்கி நிற்கிறது. ஆனால் அந்த இடங்களில் சிலவே, உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயங்களைக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஆந்திரா மாநிலத்தின் பீமவரம் அருகே உள்ள யனமதுரு என்ற சிறிய கிராமம், உலகில் எங்கும் காண முடியாத ஒரு அபூர்வக் காட்சியை வழங்குகிறது. சிவபெருமான் தலைகீழாக காட்சி தரும் கோவில். புராணக்கதைகளின்படி, சம்பாசுரன் எனும் அரக்கன், பிரம்மனால் […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் படுகொலைக்குப் பிறகு இந்த மோதல் முடிவுக்கு வரும் என்று நெதன்யாகு கூறியுள்ளார். ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்களன்று ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அடுத்த 3 மாதங்களில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் (basis points) வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதையடுத்து, தற்போது ரெப்போ விகிதம் 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களிலும் […]

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் […]

நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார். டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் முகுல் தேவ். நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். […]

இன்று மதியம் திடீரென ஜியோ நெட்வொர்க் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பரவலான நெட்வொர்க் பிரச்சனைகளை சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இணைய இணைப்பு, மொபைல் சிக்னல்கள் மற்றும் ஜியோ ஃபைபர் சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து புகார் கூறி உள்ளனர்.. […]