பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவசரகால கொள்முதலுக்காக 28 ஆயுத அமைப்புகளை வழங்கியுள்ளது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உந்துதல் (Aatmanirbhar Bharat) நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் […]

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101), மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ள நிலையில், அவர் மத்திய இணையமைச்சர் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை மீனா. 45 ஆண்டுகளை கடந்தும் மீனா திரையுலகில் பயணித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மீனா மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, […]

பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது […]

மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் […]

மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல் ஆகும். இது நமது உடலில் நச்சுக்கள் வெளியேற்றம், பித்த நீர் உற்பத்தி, செரிமானம், ஆரோக்கிய குருதி சுழற்சி போன்ற பல அத்தியாவசிய செயல்களை நிறைவேற்றுகிறது. இந்த அளவிற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், நாம் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம். எப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது? நாம் உண்பது, பருகுவது, வாழும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேரடியாக கல்லீரல் மீது தாக்கம் […]

இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்கு மத்தியில் பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா தனது எதிர்கால கணிப்புகள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை பலித்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவில் வாழ்ந்து வந்த பாபா வங்கா, கண் பார்வையற்றவர். சிறு வயதில் அவர் கண் பார்வையை இழந்த போது அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி அவருக்கு […]

போதை பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக நிர்வாகி பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் தீங்கிரை என்ற படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ காந்த் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அதன் மூலம் பிரதீப் குமாரிடம் இருந்து […]

சிம் அல்லது மொபைல் சாதனம் இல்லாமல் செயல்படும் புதிய குவாண்டம் 5G வயர்லெஸ் அணுகல் சேவை நெட்வொர்க்கை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது. BSNL-ன் 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேபிள்கள் மற்றும் பிற நிலையான உபகரணங்களின் தொந்தரவு இல்லாமல் 5G FWA இணையம் அதிவேக இணைய நெட்வொர்க்கை வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BSNL 5G தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் நிறுவனம் நாட்டில் ஏதோ ஒரு மட்டத்தில் […]