இன்றைய டிஜிட்டல் யுகத்தில், காய்கறி வாங்குவது முதல் அரசுத் துறைகளில் பத்திரப் பதிவு செய்வது வரை அனைத்தும் விரல் நுனியில் வந்துவிட்டன. அந்த வரிசையில், வங்கிக் கிளைகளுக்கு நேரில் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து கணக்கை மூடும் பழைய நடைமுறைக்கும் இப்போது விடை கொடுக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற வங்கிக் கணக்குகளை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் ரத்து செய்யும் வசதியை முன்னணி வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும், போதிய வழிகாட்டுதல் இல்லாததால் இன்றும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலத்தில் பலரது பாக்கெட்டுகளில் இருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவர் பயன்படுத்திய கடனுக்கு யார் பொறுப்பு? அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் ஒரு விரிவான அலசலை இங்கே காண்போம். குடும்பத்தினர் […]
அமெரிக்காவின் பெரும் பகுதியை உறைபனியில் ஆழ்த்தியுள்ள ஒரு சக்திவாய்ந்த பனிப்புயல், அந்நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் தொடங்கி நியூ இங்கிலாந்து வரை நீளும் இந்தப் புயலின் கோரப்பிடியில் சுமார் 14 கோடி மக்கள் சிக்கியுள்ளனர். இது சாதாரணப் பனிப்பொழிவு அல்ல, பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வானிலை மாற்றமாகும். பனியின் தாக்கத்தால் மின்சாரக் கட்டமைப்பு நிலைகுலைந்து போனதால், […]
தமிழக அரசியலில் தேமுதிக, தற்போது “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தீவிர பிரச்சாரத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 50 சதவீத பணிகள் திருப்திகரமாக இருந்தாலும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஐஎம்பிஎஸ் (உடனடிப் பணப் பரிமாற்ற சேவை) பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளது. இது பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இதுவரையில், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலம் ஐஎம்பிஎஸ் வழியாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது. இருப்பினும், இந்த வசதியில் தற்போது ஒரு […]
149 மில்லியன் (14.9 கோடி) தனித்துவமான லாகின் விவரங்களும் (logins) பாஸ்வேர்டுகளும் வெளியே கசிந்துள்ளதாக ஒரு மாபெரும் இணையப் பாதுகாப்புச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. இது எந்த ஹேக்கரின் திட்டமிட்ட தாக்குதல் அல்ல. மாறாக, சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெரிமையா ஃபௌலர் (Jeremiah Fowler) 149,404,754 தனித்துவமான லாகின் மற்றும் பாஸ்வேர்டுகள் அடங்கிய, சுமார் 96 GB அளவுள்ள மூல தரவு எந்தவிதமான பாஸ்வேர்டு பாதுகாப்பும் அல்லது குறியாக்கமும் (encryption) இல்லாமல் […]
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். […]
கலபுரகிக்கு அருகிலுள்ள ஆசாத்நகர் கிராமத்தில் புதிதாகத் திருமணமான அனுசுயா அவினாஷ் ஆகாடே என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கிராம வாழ்க்கையுடன் பழகிக்கொள்ள அவர் சிரமப்பட்டதாகவும், நகர வாழ்க்கையை விரும்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் பெங்களூரில் பணிபுரிந்த ஒரு பி.எஸ்சி பட்டதாரி ஆவார். கலபுரகி நகரின் புறநகரில் உள்ள ஆசாத்நகர் கிராமத்தில் 26 வயதுடைய புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் […]
பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]
பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியது.. மேலும் பேறுகால விடுப்புக்கோரி வழக்குகள் வராதவகையில் அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை […]

