சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை […]

தமிழகத்தில் 16ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 18-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், […]

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் வரும் நவம்பர் 19-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மோடி வரும் […]

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட […]

டிசம்பர் 6ம் தேதி டெல்லி உட்பட நாடு முழுவதும் 32 கார்களை உள்ளடக்கிய ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக வரலாற்றில் மிக மோசமான தொடர் குண்டுவெடிப்பாக இருக்கக்கூடிய தாக்குதலில் இருந்து இந்தியா மயிரிழையில் தப்பித்தது,3,200 கிலோகிராம் வெடிபொருட்களுடன் நிரப்பப்பட்ட 32 கார் குண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை இந்திய உளவுத்துறை அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்த திட்டமிடப்பட்ட வெடிப்புகள் ஆயிரக்கணக்கான […]

திமுக அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை நேரடியாக (ஒன் டு ஒன்) சந்திக்கும் ‘உடன்பிறப்பே வா’ என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 81 தொகுதிகளின் நிர்வாகிகளை ஸ்டாலின் […]

இன்று டொரோண்டோவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு (AI188) இன்று வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நேரத்தில் அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக டெல்லி காவல்துறைக்கு ஒரு செய்தி வந்தது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தின் குண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (Bomb Threat Assessment Committee – BTAC) […]

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான அங்கீகார விவரங்களை காட்டியதாகக் கூறி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. இந்த நடவடிக்கை, நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில்13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த கார் வெடிப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, அதிகாரிகள் “வைட் காலர் […]

வீடு, அலுவலகம் அல்லது கடை போன்ற எந்த பணியிடத்திலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், நேர்மறை ஆற்றல் எப்போதும் பிரகாசித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக, நல்ல வருமானம் இருந்தபோதிலும், பணம் தங்கள் கைகளில் அமர்ந்திருப்பதில்லை என்றும், வீண் செலவுகள் அதிகரித்து வருவதாகவும் புகார் கூறுபவர்களுக்கு வாஸ்து நல்ல தீர்வுகளைக் கொண்டுள்ளது. வாஸ்து குறைபாடுகளால் பணம் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன […]