மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் பாணியிலான லாக்டவுன் குறித்து சூசகமாகத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்பது குறித்த இணையத் தேடல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரைகளை உற்று நோக்கினால், அந்தத் தகவல் தவறானது என்பது தெரியவருகிறது. ‘லாக்டவுன் ’ குறித்த […]

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) , பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியது. அந்நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.5.30-ம், ஒரு லிட்டர் டீசல் விலையை ரூ.3-ம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால், பெட்ரோல் விலை தற்போது ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.107.93 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஏறத்தாழ ரூ.97.22 ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் […]

முன்னணி சமூக ஊடக நிறுவனமான Meta, தனது உள் துறைகளுக்குள் மீண்டும் ஒருமுறை பெரும் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. தனது வணிக இலக்குகளை மறுமதிப்பீடு செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாக, விற்பனை, பணியமர்த்தல் மற்றும் மெட்டாவர்ஸ் (metaverse) திட்டங்களைக் கண்காணிக்கும் ‘Reality Labs’ போன்ற முக்கியத் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவனத்தை இன்னும் திறம்படச் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தற்போது […]

புதுச்சேரியில் 3 தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.. இந்த நிலையில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் […]

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் […]

சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டால், அதன் வலி தாங்க முடியாததாக இருக்கும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட எவரிடம் கேட்டாலும், அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறுவார்கள்; அந்த அளவுக்கு அது வேதனை மிகுந்ததாக இருக்கும். சிறுநீரகக் கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டாலும் கூட, சுமார் பாதி நோயாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் அவை மீண்டும் உருவாகும் அபாயம் உள்ளதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த […]

நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற ‘நட்பு நாடுகள்’ பயன்படுத்த அனுமதித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் ஒரு பதிவில், “ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி: சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகள் […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் இபிஎஸ் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக கூட்டணி கட்சிகளை அடிமைக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார்.. இந்த நிலையில் இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்உ, கோவை வடக்கு, கந்தர்வ கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகரகோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என பாஜகவுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, […]