2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது, இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் […]

வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. கோடை வெயில்‌ தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால்‌ பொதுமக்கள்‌ கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு நாளைக்கு 4.5 லிட்டர் தண்ணீர் வழங்கவும், வேலை நேரத்தில் […]

ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால்‌ விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால்‌ அரசு தான்‌ பதில்‌ சொல்ல வேண்டும்‌. எனவே அனுமதி இல்லாமல் பால்‌ விற்பதை தவிர்க்கும்‌ வகையிலான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் ஆவின்‌ […]

இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மாலத்தீவிலும், இந்தியாவிலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தந்த நாடுகளின் திறன் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உதவிபுரிவதோடு தங்களின் தொழில்முறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் […]

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தற்போது இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயல்பாடுகளில் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த நீக்கங்கள் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR உட்பட பல்வேறு துறைகளில் பணியாளர்களை குறைத்து வருகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் […]

விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 66.40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 7.92 சதவீதம் குறைவு ஆகும். 2022 ஏப்ரல் […]

தேசிய எம்எஸ்எம்இ விருதுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ‌ சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது. இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, உற்பத்தி தொழில்துறை, சேவை தொழில்துறை, தொழில்களில் சிறப்பு பிரிவு மாநில விருது, மாவட்ட […]

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், தற்போது தினசரி விலை நிலவரம் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2022இல் 37 ஆயிரத்திற்கு தங்கம் விற்பனையானது. ஆனால் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு […]

இந்தியாவில்‌ தற்போது உற்பத்தி பொருட்கள்‌ / சேவைகளை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி மூலமாக தொழில்கள்‌ விரிவடைவதற்கான வாய்ப்புகள்‌ அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும்‌ அதன்‌ வழிமுறைகளை பற்றியும்‌ தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்‌, சட்டதிட்டங்ககளையும்‌ குறித்த இணையவழி கருத்தரங்கம்‌ பயிற்சியினை வரும்‌ 09.05.2023 தேதி முதல்‌ 10.05.2023-ம்‌ தேதி வரை […]

நாகாலாந்து மாநிலம் திமாபூரில் சுயசார்பு இந்தியா நிதியின் கீழ், BizAmp திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவற்றின் வணிகங்களைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. BizAmp நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வணிகத்தைப் பெருக்கக் கொண்டு வரப்பட்ட முதல் விழிப்புணர்வுத் திட்டமாகும். இந்திய பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் […]