மத்திய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த புதிய உத்தரவு ஏப்ரல் […]

ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்திய தர நிர்ணய ஆணையத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் உள்ள நார்த் ஸ்டார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ​​இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், மொத்தம் 48 பொம்மைகள் (47 மின்சாரம் அல்லாத பொம்மைகள், 1 […]

மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை எல்.ஐ.சி மூலம் செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் மே 26, 2020 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் திருமணமான தம்பதிகள் பாதுகாப்பான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.. இந்தத் திட்டத்தை எல்.ஐ.சி செயல்படுத்தி வருகிறது.. திருமணமான தம்பதிகள் மார்ச் 31, 2023 வரை இந்தத் திட்டத்தில் முதலீடு […]

கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. சமீப காலமாக, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.. பணத்தை வேறொரு நபருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ நாம் இந்த […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், இனி பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டியதில்லை.. ஆம்.. டோர்ஸ்டெப் சேவையின் (Doorstep Service) உதவியுடன் வீட்டு வாசலிலேயே பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.. ஏடிஎம்கள் மற்றும் பிற UPI சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற […]

பான் கார்டு என்பது தற்போது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாகும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாகவும் பான் எண் இருக்கிறது.. வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் பான் எண் உதவுகிறது. இருப்பினும், ஒரு தனி நபர் ஒரு […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்: ஓய்வூதிய கோரிக்கைகளை UMANG ஆப் மூலம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் […]

வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை எனில் பான் எண் செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் […]

MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் பிரச்சனை நிறைந்த காலகட்டத்தில் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்தப் […]