சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது. ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னைத்துறைமுக ஆணையத்தின் இணையதளமான www.chennaiport.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். […]

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, […]

இந்தியாவின் 2-வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிபள் பே தொகையை 60% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக உள்ளது. இந்நிலையில் விப்ரோ, கடந்த காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்ஃபோசிஸ் தற்போது அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் […]

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல்‌, வனங்கள்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ அமைச்சகம்‌, இந்திய அரசின்‌ மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள்‌ அக்டோபர்‌ 1, 2016 முதல்‌ நடைமுறைபடுத்தப்பட்டது. மின்‌-கழிவு (மேலாண்மை) விதிகள்‌, 2016-ன்கீழ்‌, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌- கழிவு புதுப்பிப்பாளர்களால்‌ மட்டுமே மின்கழிவுகளைச்‌ சேகரித்து செயலாக்க முடியும்‌ மேலும்‌ மத்திய மாசுகட்டுபாடு வாரியத்திடம்‌ […]

உலக சந்தைகளில் அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததை அடுத்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலைக்குள் தள்ளக்கூடும் என்கின்ற காரணத்தினால யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்கள் வாங்குபவர்களுக்கு கிரீன் பேக்- விலை தங்கத்தின் விலையை உயர்த்துகின்றது. இந்தியாவின் டெல்லி, கல்கத்தா, மும்பையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.. […]

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ரூபாய் 2009 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைத்துள்ளது. எனவே, தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 1893க்கு விற்பனையாகின்றது. […]

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.சர்வேதேச அளவில் நிலவும் கச்சா எண்ணையின் விலை மாற்றங்களை தொடர்ந்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை […]

எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP, காப்பீட்டு பெற KYC கட்டாயம் உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. எல்பிஜி சிலிண்டர் பெற OTP கட்டாயம் எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தினம்தோறும் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இனி இதனை முன்பதிவு செய்யும் போது, நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும். […]

2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும். மத்திய நேரடி வரிகள் வாரியம் ஜூலை-செப்டம்பர் 2022 காலாண்டிற்கான படிவம் 26Q இல் வருமான வரி விலக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, கால அவகாசம் அக்டோபர் 31 என நிர்ணயம் செய்யப்பட்டது […]

நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி […]