2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும். நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்குப் புத்தகங்கள் தணிக்கை செய்யப்பட […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தி தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இபிஎஃப்ஒ இணையதளத்திலிருந்து இ- பாஸ்புக் பதிவிறக்கம் செய்துள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டும்தான் பாஸ் புத்தகத்தை […]
அவசரத்திற்கு உதவும் என தங்கத்தைச் சேர்த்து வைப்பது கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்று. தங்கத்தை வைத்து எளிதாக பணத்தை புரட்ட முடியும். வங்கிகள் இதற்கு தனிநபர் கடன் வட்டியை விட குறைந்த வட்டியில் பணம் வழங்குகின்றன. குறைந்த தங்க நகைக்கடன் வட்டி வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்தியன் வங்கி தங்கக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டியாக 7 சதவீதத்தை புளோட்டிங் ரேட்டாக வசூலிக்கிறது. […]
தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் அலுவாவில் உள்ள வாழக்குளத்தில் அமைந்துள்ள அதன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி முதல் நான்கு நாள் பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தேங்காய் சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லெட், சட்னி பவுடர், தேங்காய் பர்ஃபி, ஊறுகாய், ஜாம் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வினிகர் மற்றும் நாடா டி கோகோ தயாரிக்கும் ஒருநாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட தேங்காய்ப் பால், வேர்களின் […]
அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. போக்குவரத்து விதிகளை மக்கள் கவனத்தில் கொள்ளாமல், மீறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை […]
தீபாவளிக்குப் பிந்தைய வட்டியைப் பெற சந்தாதாரர்கள், PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம். இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் தீபாவளிக்குப் பிறகு தங்கள் கணக்குகளில் தேவையான வட்டியைப் பெறலாம். பல ஆயிரக்கணக்கான இபிஎப்ஓ பயனர்கள் தங்கள் கணக்குகளில் தோன்றும் வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2021-2022 ஆண்டுகளுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், இது நான்கு தசாப்தங்களில் மிகக் குறைவு, இது 8.1% என மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. 8.1% […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக வணிகவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பண்டிகை காலங்களில் வணிகர்கள் பட்டியலின்றி வணிகம் செய்கின்றமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை எனும் புகார்களை தொடர்ந்த சென்னை (நுண்ணறிவு -1) கோட்ட அலுவலர்களால் செளகார்பேட்டை, தி.நகர் மற்றும் இதர இடங்களில் இயங்கும் 52 வணிகதலங்களில், 17.10.2022 மற்றும் 18.10.2022 […]
கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது. ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், ஒரு சவரனுக்கு Rs 120-ம் குறைந்டுள்ளது. இது வெள்ளியின் விலையும் கடந்த 2 […]
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில்,பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ […]
விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை பிஎம் கிசான் திட்டத்தின் கோடிக்கணக்கான மக்கள் […]