தருமபுரி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருவாரூர் மாவட்டத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக. அலுவலகத்தில் இதற்கான இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமமுகவின் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் குறும்பேரி ஆர். மணிகண்டன் தலைமையில், ஒன்றிய அவைத் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் […]
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாகவும், சர்வதேசப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் சரிவு : சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு (28 கிராம்) $7.76 குறைந்து $4,073 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், வெள்ளியின் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும்.தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் […]
தமிழகத்தில் இன்று தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அறிக்கையும் […]
இன்றும் நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-11-2025) காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் […]
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் சில மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த மோதல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை.. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு […]
கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் விசாரித்து வருகின்றனர். கரூர் தாந்தோணிமலையில் […]
தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமால் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அந்த தீர்ப்பில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.. மசோதா விவகாரத்தில் […]

