கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் பூர்வ ஆய்வு தேவை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரமான பதிலடி கொடுத்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்த கே.பாலுவை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது சலசலப்பு எழுந்து […]
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது. முதல்வர் ஆசை விஜய்க்கும், […]
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த […]
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான […]
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், வேல்முருகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். […]
நீட் மறு தேர்வு கோரிய மேல்முறையீட்டு வழக்கில், தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் பெய்த கன மழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முழுமையாக தேர்வை எழுத முடியவில்லை என கூறி சென்னையை சேர்ந்த 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]
ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) என மொத்தம் 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். மேலும், இந்த தேர்வு […]