தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நலக் குறைவால் காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய திரையுலகில் தனது இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த சவுகார் ஜானகி, முதுமை மற்றும் உடல்நலக் குறைவு […]

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி பேசும்போது, பல எம்எல்ஏக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பாா்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நோ்மையான ஆட்சி அமைய உறுப்பினா்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூா்த்தி செய்ய […]

தமிழ்நாட்டில் உழவர் நலன் சார்ந்த அரசு மானியங்கள், பயிர்க் காப்பீடு மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் உண்மையான விவசாயிகளை மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்யவும், தகுதியற்ற போலிப் பயனாளிகளைக் கண்டறிந்து களையெடுக்கவும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ திட்டத்தில் முறைகேடுகளைத் […]

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களைப் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கார்டின் மென்பொருள் நகல் (Soft copy) அல்லது அட்டை எண் இருந்தாலே போதுமானது என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் தற்போது […]

முழுமுதற் கடவுளான விநாயக பெருமானின் பரிபூரண அருளையும், சகல யோகங்களையும் பெறுவதற்கு புராணங்களில் பல்வேறு உன்னதமான வழிபாட்டு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கணேச சகஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சதுர்லட்ச ஜபம்’ எனப்படும் நான்கு லட்சம் முறை விநாயகர் மூலமந்திரத்தை உச்சரித்து வழிபடும் ‘சதுராவர்த்தி தர்ப்பண முறை’, ஒருவருக்கு அபரிமிதமான நற்பலன்களையும், நினைத்த காரியங்களில் தடையற்ற வெற்றியையும் பெற்றுத் தரும் மிகச் சக்திவாய்ந்த உபாசனையாக கருதப்படுகிறது. இவ்வழிபாட்டு முறையில் முதற்கட்டமாக, மோதகம், அப்பம், […]

ஆன்மிக மரபுகளில் வெள்ளிக்கிழமை மிக தனித்துவமான புனித நாளாக கருதப்படும் சூழலில், சனாதன தர்மத்தில் இந்நாள் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்குரிய மிக மங்கலகரமான தினமாகப் போற்றப்படுகிறது. அலைமகளின் பரிபூரண அருள் கிடைக்கும் இல்லங்களில் வறுமை நீங்கி, எப்போதும் சுபிட்சமும் செல்வச் செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி பொதுவாக ஒரே இடத்தில் நிலைத்து நிற்காத சஞ்சல குணம் கொண்டவர் என்பதால், […]

மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கானது அல்ல, அது தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை முன்னிறுத்தியுமே திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படுவதன் மூலம் கர்நாடகாவிற்கு வெறும் 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் […]

சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் மாநாட்டின் நிறைவுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை, முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். தென் மாநில முதல்வர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் அடிப்படைத் தேவைகள், சவால்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் மின்சாரம் மற்றும் வாகனப் பயன்பாட்டுத் தேவைகள் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கினால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரும் 2036ஆம் ஆண்டிற்குள் 1.50 லட்சம் கோடி அமெரிக்க டாலராக (1.5 Trillion USD) உயர்த்தும் தொலைநோக்கு திட்டத்துடன் தமிழக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய தொழில் முதலீடுகளைத் தீவிரமாக ஈர்க்கும் நோக்கில், புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் 21 நாட்களுக்குள் விரைந்து வழங்குவதை உறுதிசெய்யும் புதிய சட்டத்தை இயற்ற […]