தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தவெக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது இருதரப்புக்கும் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் எழுந்தன. அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் மாண்பையும், மரபையும் காற்றில் பறக்கவிட்டு, அமைச்சர்களையும் சக உறுப்பினர்களையும் நோக்கி ‘வாடா, போடா’ என ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வருவதாக கடும் கண்டனம் தெரிவித்தார். […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, […]

திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் […]

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது என்றும், அப்பணிகளுக்கு தமிழ் மொழித் தகுதி கட்டாயம் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 1,797 பேருந்து நடத்துனர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான பணி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ‘எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.61.56 […]

​கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ​கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சொகுசு கார்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஊத்தங்கரை காவல்துறையினர் சினிமா பாணியில் தீவிர வியூகம் அமைத்து 750 கிலோ குட்கா மற்றும் 3 சொகுசு வாகனங்களைப் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்துள்ளனர். […]

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்மண்டல கவுன்சிலின் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் குழுத் துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக […]

தமிழக சட்டமன்றத்தில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, வீடு கட்டும் திட்டங்களின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை ஒப்புக்கொண்டதற்காக பெரியசாமிக்கு நன்றி தெரிவித்ததுடன், எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய […]

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொகுதிப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளவும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறியவும் ஏதுவாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்காக மாதம் ரூ.75,000 மற்றும் அலுவலக உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக […]

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். தஞ்சை, கோவை, நெல்லை , மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும். சென்னை […]

தமிழ்நாட்டில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் […]