தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே மக்கள் மத்தியில் அனலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் மீண்டும் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அஸ்திரத்தை கையில் எடுக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக […]

விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். […]

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.. அதன்படி இன்று […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. எனினும் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட […]

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 5 பேர் மீது 6 பேர் கும்பல் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.. இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் நடிகரும், தவெக […]

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 13-ம் தேதி அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. முதல்வரின் இந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சிவகங்கையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்தவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைக்க வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிப் போன வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக […]

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, குடும்ப தலைவிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக கூடுதலாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 ஏற்கனவே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஜூன் மாதத்திலிருந்து நிரந்தரமாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. உரிமைத் […]