ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் நாளிதழ் செய்தியாளர்களை தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோளிங்கரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ கபிலிடம், யூடியூபர் சிவா என்பவர் படம் குறித்த விமர்சனத்தை கேட்க […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுடன், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவையும் மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. டெல்லி மேலிடத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு 2 அமைச்சர் பதவிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் […]
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான ‘கோ-ஆப்டெக்ஸ்’ (Co-optex) நிறுவனத்தின் 10 விற்பனை நிலையங்களை இம்மாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசின் கைத்தறித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 90 ஆண்டுகாலப் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 146-க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் நெசவாளர்களின் […]
ஓசூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் உள்ளாடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம கும்பல் உலா வந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.48 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்துள்ளனர். வெறும் உள்ளாடை மற்றும் முகமூடி மட்டுமே அணிந்திருந்த அந்தக் கும்பல், தெருக்களிலும் வீடுகளின் முன்புறமும் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்து ஒவ்வொரு […]
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட முக்கிய திட்டங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ➣ தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ➣ அனைத்து மாவட்ட […]
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல தலைமுறைகளாக நடைமுறையில் இருந்து வந்த நிலவரி வசூலிக்கும் முறை, நடப்பு 1436-ஆம் பசலி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நீண்டகால வரிச் சுமையிலிருந்தும், வருவாய்த் துறையின் தேவையற்ற நிர்வாக நடைமுறைகளிலிருந்தும் முழு விடுதலை […]
சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் சட்டமன்ற மாண்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த உறுப்பினர்கள் கற்றுத்தர வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பேசியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அவையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் அனைவரும் […]
முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 2வது முறையாக கூடுதலாக பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பேசி வரும் முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு துணை நிற்கும் அரசு இருக்கும் நாடு தான் வளமாக இருக்கும். எனவே த.வெ.க அரசு பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன் தொகை தாமதமாகவே […]
இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது உதயநிதி என்ன பேசினார்?. போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், கோவையில் மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநிலத்தில் […]
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி இடையே நடந்த காரசார விவாதத்திற்கு மத்தியில், அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் […]

