மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற முருக வழிபாட்டுத் தலமான இங்கு, கருவறையில் முருகப்பெருமான் சுமார் 7 அடி உயரத்தில், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்திற்கு ‘வல்லக்கோட்டை’ என்ற பெயர் […]
மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர். நகராட்சியின் 26 மற்றும் 27 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், அனீஷ் மற்றும் மைக்கல்ராஜ் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழ்நாட்டில் நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சொத்து பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள இந்த ஒப்புதலின் மூலம், தமிழகப் […]
மத்திய பட்ஜெட் 2026-27 தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டாவது தமிழகத்தின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்’ நடந்து கொண்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார். வரிப்பகிர்வு முதல் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் வரை அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதை அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 விழுக்காட்டிலிருந்து 50 […]
செங்கல்பட்டு அருகே 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் முறையற்ற கருக்கலைப்பு முயற்சியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதே ஆன அந்தச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த நிலையில், 10 வார கர்ப்பமடைந்தது உறவினர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்ப கௌரவம் மற்றும் சமூகப் பழிச்சொல்லுக்கு […]
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கோவில்புரத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான கண்ணன் (44), கார்த்திகை வடலி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நிர்வாண நிலையில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு நடத்திய அதிரடி விசாரணையில், மதுபோதையில் நடந்த கொலை அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று இரவு, கண்ணனும் கோணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிலி என்பவரும் […]
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பக்கவாதம் (Stroke) காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல […]
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் பாய்ச்சலை, 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நிகழ்த்தியுள்ளது. “இனி ரயிலில் செல்வது என்பது வெறும் பயணம் அல்ல; அது வானத்தில் பறப்பதற்கு இணையான ஒரு வேகம்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 புதிய அதிவேக ரயில் (High-Speed Rail) வழித்தடங்களை அறிவித்துள்ளார். இதுவரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த புல்லட் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதே போல் வெள்ளியின் விலையும் இதுவரை இல்லாத உயர்வுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. […]

