2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவும் விதித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் திடீரென டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் […]

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் புதிதாக 10,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி, ஏழை மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை […]

தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]

நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள பாலிடெக்​னிக் செமஸ்​டர் தேர்​வுக்கு கட்டணம் செலுத்​த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.‘நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள பாலிடெக்​னிக் தேர்​வுக்கு எந்த வித​மான அபராத கட்​ட​ண​மும் செலுத்​தாமல் செப்​டம்பர் 20-ம் தேதி வரை​யும், ரூ.150 அபராத கட்​ட​ணம் செலுத்தி செப்​டம்பர் 21 […]

இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை சில இடங்களிலும், வரும் 20 முதல் 22-ம் தேதி […]

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு விடுபட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: கடந்த 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) அடங்கிய வேதியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு), உதவி மேலாளர் (சேமிப்பு கிடங்கு), துணை மேலாளர் (தர நிர்ணயம்) உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியுள்ள தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய […]

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக […]