சென்னையைச் சேர்ந்த 24 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், இந்த மருத்துவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நள்ளிரவில் நெல்லை – தூத்துக்குடி சாலையில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வந்த நபர், மருத்துவரிடம் பேச்சுக் கொடுத்து, […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் சொத்து தகராறில் பெண்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனியப்பன் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்கா கந்தாயி என்பவருக்கு பத்திரம் மூலம் எதுவும் எழுதித் தரமால், வாய்மொழி உறுதியாக வீட்டின் இடத்தை கொடுத்துள்ளார். இதற்கிடையே, கந்தாயி இறந்த நிலையில், அவரது மகள் […]

2025-26ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா, மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வாக காலாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையாகக் கொண்டு, […]

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு […]

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மேலூர் பேருந்து நிலையத்தில் […]

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடை பணியாளர் […]