மாணவர்கள் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, […]

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நேரு நகரில், தனது அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரு நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமிக்கு, சூர்யா (27) மற்றும் சிவசுதன் (21) என இரு மகன்கள் உள்ளனர். சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

சென்னை தலைமை செயலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவி உடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பாதுகாப்பு கருதி, தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மெகா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, ஜான் பாண்டியன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், திண்டுக்கல்லில் நடந்த பரப்புரையின்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் […]

தமிழில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வரும் சன் டிவி (SUN TV) 32 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கலாநிதி மாறனின் தலைமையில், 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சன் டிவி திரைப்படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களின் மனதைக் கவர்ந்து, தொலைக்காட்சித் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன் குழுமத்தின் கீழ், கே டிவி, சுட்டி டிவி, சன் லைஃப், சன் […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையுடன், மாநில அரசின் சார்பிலும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் அரவை திறனை முழுமையாகப் பயன்படுத்தவும், இந்த திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. முன்னதாக, […]

தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம், கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கடன் பெற இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சங்கம், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 […]

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சோதனைச்சாவடியில், ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக புல்லரம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காரை மடக்கிப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், பூண்டி அருகே சென்றுகொண்டிருந்த அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து துரத்திச் சென்ற போலீசார், […]