தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தகுதியும், நிதிசார்ந்த ஆதரவும் வழங்கும் வகையில், மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டுக்கான புதியதும் புதுப்பித்தலும் செய்ய வேண்டிய கல்வி உதவித்தொகை (scholarship) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மேலாண்மை கழகங்கள் […]

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். தவிர, மேற்கு திசை காற்றில் […]

பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் […]

1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]

கள்ளக்காதல் தொடர்பான சண்டையில் வாட்ச்மேன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டுக்காடு மேல தெருவை சேர்ந்த சந்திரன் (வயது 55), ராமேஸ்வரம் – கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெள்ளப்பட்டி அருகே பாலம் கட்டும் பணியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இவர், பணிபுரிந்த குடோனில், மர்ம நபர் ஒருவர் கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தருவைகுளம் காவல் நிலைய போலீசார், […]

சென்னையில் 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சினிமா துணை நடிகை உட்பட 3 பேரை போலீசர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள 100 அடி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 9ஆம் வகுப்பில் பயிலும் […]