சித்தா டாக்டர் என்று வந்த ஒருவர் கதை பேசிக்கொணே 2 மணி நேரத்தை இழுத்தடித்துவிட்டார் என ராஜேஷ் தம்பி சத்யன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது உடல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பாமகவில் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு இன்று மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை […]
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ல் தனது அரசியல் கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டி மாநாடு, சென்னையில் பொதுக்குழு, கோவையில் பூத் மாநாடு என தொடர்ச்சியான செயல்பாடுகளால் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற விஜய், தற்போது மாவட்ட மட்ட கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி வருகிறார். எனினும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், முழு நேர அரசியலில் முழுமையாக இறங்காமல் […]
தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி […]
To the question raised by PMK leader Anbumani Ramadoss, “What did I do wrong?”, PMK founder Ramadoss replied, “It was not Anbumani who made the mistake, it was me who made the mistake by making him a Union Minister at the age of 35.” This has created a huge stir in politics.
தமிழ் சினிமாவில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். இவர், 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு – ராஜம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா, பள்ளிக்குப் போகாமல் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்னைக்கு […]
தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்பியாள் தொழிற்பிரிவுற்கு 8- ஆம் வகுப்பிலும் பொருத்துநர், குளிர் பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை […]
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]
வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில்; அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும். இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் […]