fbpx

நாங்கள் அழவில்லை; எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு Out Of Control தான் என தெரிவித்தார். நிதிக்காக நாங்கள் அழவில்லை; எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம் என்று பிரதமர் மோடிக்கு பதிலடி …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று பொன்னேரிக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து புறப்பட்டு பொன்னேரி வந்த முதல்வரை ஆவடி நாசர் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். பொன்னேரியில் இருந்து விழா நடக்கும் ஆண்டாள் குப்பம் வரையிலும் இரு மருங்கிலும் மக்கள் திரண்டு நின்றனர். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், …

மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழ் வழியில் போதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என …

ஒருநாளைக்கு ஒரு ஓட்டுநர் 8 மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்து, அனைத்து நாடுகளும் …

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை எம்பி உள்ளிட்ட தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ‘வருங்கால முதல்வரே’ என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் …

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பேருக்கு கிரைண்டர் வாங்க ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 17) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை …

ஒரே பதவியில் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, போனஸ் உயர்வு வழங்கப்படுவது குறித்து புதிய விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், நிதித்துறையின் சார்பில் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 216ன்படி, ஒரே பதவியில் …

கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி தியாகராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் தியாகராஜனுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான், நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 6 லட்சம் குடும்ப …

சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடத்துள்ளன..? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சத்யஜோதி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது சகோதரர் வெள்ளைக்காளி தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால், வீடியோ …