கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (41), நாகர்கோவிலில் இயங்கி வரும் ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுஷா ஜாஸ்மின் (33), தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்கு வாழ்க்கையில், கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. […]

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரஹமதுல்லா (வயது 26) என்பவர் கார் விற்பனை முகவராக தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி சஹானா (24) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சமீப காலமாக கூனிமேடு கிராமத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது, சஹானாவுக்கும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் […]

சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் என்ற உயர் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (48). இவர், சமையல் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலையில் தனது வீட்டின் அருகே கருணாகரன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பூங்கொடி என்ற பெண், தனது வளர்ப்பு நாயான பிட்புல் ரக […]

12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் , ஜூன் & ஜூலை 2025 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2025 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் ( Re – total ) மற்றும் மறுமதிப்பீடு ( Revaluation கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது […]

சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சொத்துக்கள் பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தின் சொத்துக்களை, சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு இடையே பிரித்து வழங்கும் முறையாகும். இது பொதுவாக குடும்பச் சொத்துக்களுக்குப் பொருந்தும், மேலும் இது ஒரு உடன்படிக்கை பத்திரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. […]

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது […]