ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்த நவம்பர் மாதம் பல புதிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் வகையில், சில சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மீண்டும் வெளியீட்டு (Re-Release) பட்டியலும் நீண்டுள்ளது. திரையரங்கில் இத்திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கிய காலத்தால் அழியாத திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் வெளியாகிறது. 1987 […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2019-இல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மதுரை கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2020-ல் திருமணம் செய்ததாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பாட்டியைப் பார்ப்பதாக சொல்லிவிட்டுச் சென்ற அந்தப் பெண், குழந்தைகளுடன் […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களின் களப்பணி என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சிறப்புத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்புப் […]

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. […]

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி, தாங்கள் தயாரித்த பொருட்களை 100 கிலோமீட்டர் தொலைவு வரை அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு நகர்ப்புறச் சந்தைகளில் தங்கள் […]

மதுபான விற்பனை விவரம், டாஸ்மாக் கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே அவைகளை விற்பனை செய்து இருக்க வேண்டும். இந்த நடைமுறையில் […]

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பசுமைக் குன்றுகளின் மத்தியில் வீற்றிருக்கிறார் குறிஞ்சி நிலக் குமரனான முருகப்பெருமான். மூலிகை மணமும், தெய்வீக அதிர்வுகளும் நிறைந்திருக்கும் இத்தலமே வரலாற்றுச் சிறப்புமிக்க தோரணமலை முருகன் கோவில் ஆகும். அகத்தியர் மற்றும் தேரையர் போன்ற புகழ்பெற்ற சித்தர்கள் தங்கள் அரிய மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்த மலையை தேர்ந்தெடுத்ததாக பாரம்பரிய நம்பிக்கை கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மூலிகைகள், தியான […]