கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (54), தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தங்கராசுவை வீட்டிற்கு அழைத்து லட்சுமி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, இந்த தகவல் அறிந்து திடீரென கொளஞ்சி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65), கடந்த மாதம் 7-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகையில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்லப்பனின் மனைவி பெருமாயியிடம் விசாரித்தபோது, செல்லப்பன் அருகில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற தகவல் கிடைத்தது. […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. விஜய் சனிக்கிழமைகளில் […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பரும், ‘கொலைகாரன்’ படத்தின் இயக்குநருமான ஆண்ட்ரூ லூயிஸ் கலந்துகொண்டு பேசினார். விஜய் ஆண்டனியுடனான தனது நட்பு குறித்துப் பேசிய ஆண்ட்ரூ லூயிஸ், “நானும், விஜய்யும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். அப்போது அவரை நான் ‘ராஜா’ […]
கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பெற அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக […]
தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த குறைதீர்ப்பு இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காணொலிக்காட்சி முறையில் நடைபெறவுள்ளது. […]
திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 1.15 கோடிப் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வெற்றி காரணமாக, விடுபட்ட பெண்களும் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டினர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, திட்டத்தை விரிவாக்க அரசு முடிவு செய்தது. இதன் ஒரு […]
குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary […]
தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]

