தமிழ்நாடு அரசு, பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதில், ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தற்போது வரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கோவையில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ, தமிழக அரசைக் குற்றம் சாட்டி, “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்களுக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் தேவைப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். கோயம்புத்தூரில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் முழு நாட்டையும் […]
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் […]
தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு […]
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]
2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. எனினும் SIR ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இது வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் சதிச்செயல் என்றும் திமுக தொடர்ந்து கூறி வருகிறது.. அந்த வகையில் திமுக தலைவரும் […]
தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இவை தவிர, பாமக, தேமுதிக, அமமுக ஆகியவை இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கவில்லை.. எனினும் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணைந்தால் தேர்தல் களம் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சாலமன் பிரபாகரன். இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை சோதித்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மயிலாடுதுறை […]
தூத்துக்குடியை சேர்ந்த 35 வயதுள்ள போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை வைத்து, பணம் கேட்டு அவரது குடும்பத்துக்கு பெண் காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில், “எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப் பணியாக வந்தார். திருமணமாகி குழந்தைகள் உள்ள அந்தப் பெண் காவலர், […]
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் […]

