வீட்டில் ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். வெளியில் இருக்கும் தூசி, சத்தம், வெப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக ஜன்னல்களை மூடி வைத்தாலும், வீட்டுக்குள் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருப்பது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். வீட்டுக்குள் காற்றோட்டம் குறையும்போது, தூசி, புகை, சமையலில் இருந்து வரும் துகள்கள், செல்லப்பிராணிகளின் கழிவுத் துகள்கள் மற்றும் பிற உட்புற மாசுக்கள் காற்றில் அதிக நேரம் தங்கக்கூடும். இதனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றின் […]

இயற்கையாகவே கருவுறுதலை அதிகரிக்கும்” என்று கூறப்படும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த அறிவுரைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமே இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இதுபோன்ற தவறான தகவல்களால் நோயாளிகள் மருத்துவ நிபுணர்களிடம் முறையான சிகிச்சை பெறாமல் ஏமாந்து போகும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்தியா ஐவிஎஃப் ஃபெர்டிலிட்டி அமைப்பின் இணை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான […]

வீட்டில் தினமும் டீ போடும் பழக்கம் இருந்தாலும், சில நேரங்களில் கடையில் கிடைக்கும் டீயின் சுவையும் மணமும் வீட்டில் கிடைப்பதில்லை என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், டீயின் சுவை பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. எந்தப் பொருளை முதலில் சேர்க்கிறோம், எவ்வளவு நேரம் கொதிக்க விடுகிறோம் என்பதும் முக்கியம். சில எளிய சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால், வீட்டிலேயே நல்ல நிறம் மற்றும் மணத்துடன் சுவையான பால் […]

வீட்டை சுத்தம் செய்ய கடைகளில் விதவிதமான கிளீனர்களை வாங்கி பணம் செலவு செய்கிறீர்களா? இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, வீட்டில் படியும் எண்ணெய் பிசுக்கு, பிடிவாதமான கறைகள் மற்றும் சில பூச்சித் தொல்லைகளை சமாளிக்கலாம். அதில் பேக்கிங் சோடா, சலவைத்தூள் மற்றும் சர்க்கரை ஆகிய மூன்று பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் கலவை, வீட்டு பராமரிப்பில் சிலர் […]

சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. ஆனால், அனைத்து வகையான சாக்லேட்டுகளும் உடலுக்கு ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. குறிப்பாக, அதிக அளவு கோகோ கொண்ட டார்க் சாக்லேட், மற்ற வகை சாக்லேட்டுகளை விட ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் காணப்படும் ஃப்ளேவனாய்டுகள், உடலில் […]

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் தற்போது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் உள்ளது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகரிக்கும்போது, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயம் அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் சிலர் இரவு உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவு உணவை சாப்பிடாமல் இருப்பதால் […]

சாணக்கியர் சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் சிலருக்கு அதிக மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது. அவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவுவதற்கும் பலர் முன்வருகிறார்கள். அதே நேரத்தில், சிலருக்கு சமூகத்தில் உரிய மதிப்போ மரியாதையோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவவும் பலர் தயங்குகிறார்கள். ஒருவரின் […]

ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் வெறும் சுவையான உணவுப்பொருளாக மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மருந்தாகவும் போற்றப்படுகிறது. இயற்கைச் சர்க்கரைகளுடன் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள தேனைச் சரியாக உட்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை சீராக்கி, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இருப்பினும், தேனை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைகளுக்குப் பதிலாகத் தீங்கையே விளைவிக்கும் என […]

இன்றைய நவீன சூழலில் தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் மருத்துவரை அணுகாமல் நேரடியாக மருந்துக் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சிறு சிறிய வலிகளுக்குக் கூட சுய மருத்துவம் செய்து கொள்ளும் இந்த போக்கு, நாளடைவில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மிக கொடூரமாக பாதிக்கும் எனச் சிறுநீரக நோய் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து […]

கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த […]