இன்றைய காலத்தில் அறிவியல் வளர்ச்சி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. அதே நேரத்தில், சில நவீன பழக்கவழக்கங்கள் உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டி (Fridge) பயன்பாடு அதிகரித்த பிறகு, உணவுகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடும் பழக்கம் அதிகமாகியுள்ளது. பல வீடுகளில் சமைத்த உணவு மீதமிருந்தால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் மட்டுமல்ல, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் […]

பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களும் இந்த முயற்சிக்கு துணையாக இருக்கக்கூடும். குறிப்பாக கெமோமில் தேநீர், வெந்தய தேநீர், கற்றாழை சாறு மற்றும் மஞ்சள் பால் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. கெமோமில் மலரிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மன அழுத்தத்தைக் குறைத்து, […]

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? ஆனால் அதை எப்படிச் செய்வது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இதனால் சிலர் அதிக பணம் செலவிட்டு பல விதமான பவுடர்களை வாங்கி பயன்படுத்துவார்கள் அல்லது ஜிம்முக்கு சென்று தேவையற்ற செலவுகளைச் செய்வார்கள். ஆனால் உண்மையில், நம் வீட்டிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி உடலில் […]

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் பணம் இருக்கலாம்; ஆனால் அதைவிட அதிகமாக பலவிதமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. சளி, காய்ச்சல் முதல் கேன்சர் போன்ற பெரிய நோய்கள் வரை இன்று சாதாரணமாகி விட்டன. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆகும். நமது முன்னோர்கள் இதுபோன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதை நாம் பெரிதாகக் காணவில்லை. காரணம், அவர்கள் உணவையே மருந்தாகக் கருதி வாழ்ந்தனர். ஆனால் […]

இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், உடனடியாக கிடைக்கும் உணவுகளையே மக்கள் அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இது உண்மைதான். பள்ளி முடித்து மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ராகி கூழ், உளுந்து கஞ்சி போன்ற பாரம்பரிய சத்தான உணவுகளை தினமும் தயாரித்து கொடுப்பது பலருக்கு சாத்தியமாக இல்லாமல் போகிறது. இதனால், கடைகளில் எளிதாக கிடைக்கும் இன்ஸ்டன்ட் பவுடர்கள் மற்றும் கலவைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் சுவை, நிறம், இனிப்பு ஆகியவற்றிற்காக […]

மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீயுடன் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. குறிப்பாக பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள், வீட்டில் என்ன சாப்பிடலாம் என்று எதிர்பார்த்து வருவது வழக்கம். அந்த நேரத்தில் அவசரமாக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த சிப்ஸ், பிஸ்கட்கள் போன்றவற்றை கொடுத்து விடுகிறோம். ஆனால் அவை குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை […]

நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும், இளநரை மற்றும் பொடுகு இல்லாத ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? குறிப்பாக, பெரும்பாலான பெண்களின் கனவே இதுதான் என்று சொல்லலாம். ஆனால், அந்தக் கனவு பலருக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து விடுகிறது. காரணம், இருக்கும் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்காக கிரீம்கள், சீரம்கள், ஷாம்புகள் என சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை […]

இல்லத்தரசிகளுக்கு சவாலான வீட்டு வேலைகளில் ஒன்று கேஸ் பர்னரை சுத்தம் செய்வதுதான். புதிதாக வாங்கியபோது பளபளப்பாக இருக்கும் பர்னர், சில நாட்களிலேயே எண்ணெய் பசை, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் படிவதால் அதன் நிறம் மாறி மங்கலாகிவிடும். அதுமட்டுமல்லாமல், பர்னரின் துளைகள் அடைபடுவதால் தீ சரியாக எரியாமல், சமையலுக்கும் அதிக நேரம் எடுக்கும். இதன் விளைவாக எரிவாயுவும் தேவையில்லாமல் வீணாகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். கேஸ் பர்னரை சுத்தம் செய்ய […]

பணம் சம்பாதிப்பதில் திறமையாக இருக்கும் நாம், ஆரோக்கியத்தை பேணுவதில் அதே அளவு கவனம் செலுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. வாழ்க்கையில் பணத்தைத் தேடி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், உடல் நலத்திற்கு தேவையான அக்கறை குறைந்து வருகிறது. இதன் விளைவாக, இன்று பல புதிய வகை நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் மற்றும் தவறான உணவு பழக்கங்கள் ஆகியவை இதற்குக் […]

மல்லிகைப் பூ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. கோடிக்கணக்கில் நகை வாங்கிக் கொடுத்தால் கூட கிடைக்காத மகிழ்ச்சி, ஒரு மல்லிகைப் பூவிலேயே கிடைத்துவிடும் எனக் கூறும் பெண்கள் பலர் உண்டு. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மல்லிகைப் பூவை தினமும் தலையில் சூட வேண்டும் எனப் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், மல்லிகைப் பூவை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியாது என்பதே ஒரு பொதுவான சிக்கலாக உள்ளது. வீட்டில் தினமும் […]