ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. செரிமானத்திற்கு இலகுவாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இது உள்ளது. பொதுவாக இடியாப்பம் அரிசி மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அரிசியை குறைக்க விரும்புபவர்கள் அல்லது மாற்று தானியங்களை உணவில் சேர்க்க நினைப்பவர்கள், ராகி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். ராகி இடியாப்பம் சுவையாக இருப்பதுடன், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும். இதனால், […]

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலை உணவாக மட்டுமல்லாமல் இரவு உணவாகவும் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் சாப்பிடப்படுகிறது. இதற்காக அடிக்கடி வீட்டில் மாவு அரைப்பது நேரம் எடுக்கும் என்பதால், இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலரும் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் பாக்கெட் மாவை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், தனியாக வசிக்கும் இளைஞர்கள், நேரம் குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு பாக்கெட் மாவு மிகவும் வசதியான தேர்வாக […]

பூண்டு மற்றும் தேன் இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை உணவுகளாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும். இதை தயாரிக்க, தேவையான அளவு பூண்டுப் பற்களை தோல் நீக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அவை முழுவதும் மூழ்கும் அளவிற்கு தூய தேனை ஊற்றி, குறைந்தது 24 மணி நேரம் ஊறவைக்கலாம். அதன் பிறகு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் […]

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். […]

கடந்த சில ஆண்டுகளாக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பலர் இன்டக்‌ஷன் ஸ்டவ்வை மாற்று சமையல் சாதனமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், மழைக்காலங்களில் இன்டக்‌ஷன் ஸ்டவ் பயன்படுத்தும் போது பாதுகாப்பு விஷயங்களில் அலட்சியம் காட்டினால் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. இன்டக்‌ஷன் ஸ்டவ் முழுவதும் மின்சாரத்தைச் சார்ந்து இயங்குவதால், […]

தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாலை நேரத்தில் சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் அவல் இருந்தால், வழக்கமான பஜ்ஜி அல்லது பக்கோடாவுக்கு பதிலாக சுவை நிறைந்த அவல் பக்கோடாவை செய்து அசத்தலாம். இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருப்பதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும், […]

மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, அதிக வேகமான வாழ்க்கை, சத்துக்கள் குறைந்த உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் தற்போது பலருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு உள்ளது. முன்பு வயதானவர்களிடம் அதிகம் காணப்பட்ட மாரடைப்பு, தற்போது இளம் வயதினரிடமும் சில சமயங்களில் குழந்தைகளிடமும் கூட ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை […]

பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான சில உணவுகள் இருக்கும். வயது எவ்வளவு ஆனாலும், சில உணவுகள் மீது இருக்கும் விருப்பம் மட்டும் மாறுவதில்லை. குறிப்பாக, பெரியவர்களாக இருந்தாலும் சில உணவுகளை குழந்தைகளைப் போலவே விரும்பி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சில உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பே பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இதை சாப்பிட்டால் இந்த நோய் வரும், அதை சாப்பிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு […]

வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நேரமும், பொறுமையும், தொடர்ந்து கவனம் செலுத்தும் பழக்கமும் அவசியம். குறிப்பாக, சிறு சிறு விஷயங்களைக் கூட கவனிக்காமல் விட்டால், வீடு சுத்தமாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அழுக்காக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, பக்கெட், வாஷ் பேசின், பாத்ரூம் டைல்ஸ் அல்லது குழாய்களில் படியும் வெள்ளை நிற உப்புக் கறைகளை எடுத்துக்கொள்ளலாம். இவை அழுக்கு அல்ல […]

காதல் என்றாலே ஒருகாலத்தில் அழகு, இனிமை என்று பல வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் காதல் என்றாலே பலருக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. காதலுக்காக நடைபெறும் கொலைகள் ஒரு புறம் இருக்க, கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. காதல் என்றாலே அதில் உணர்வுகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்திருக்கும் என்ற நிலை […]