இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே செல்போன் மற்றும் கணினி பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் இளம் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் மணிக்கணக்கில் செல்போனில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மத்தியிலும் செல்போன் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. மூளையில் கட்டியை ஏற்படுத்தும் செல்போன்..? நீண்ட நேர மொபைல் பயன்பாடு மூளைக்கட்டி அபாயத்தை அதிகரிக்குமா..? என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. […]

பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கொரோனாவால் பாதிக்கப்படுவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதேபோல், இந்திய அரசாங்கமும் கொரோனா வைரஸ் குறித்து பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கோவிட்-19 என்பது 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு தொற்றுநோய் வைரஸ் ஆகும். இதை ஏற்படுத்தும் வைரஸ் கடுமையான சுவாச நோய்க்குறி […]

இன்றைய தலைமுறையினர் தங்கள் பெரும்பாலான நேரத்தை உட்கார்ந்த நிலையிலேயே செலவிடுகிறார்கள். வீட்டில் சோபா அல்லது படுக்கையில் அமர்ந்து, டிவி பார்த்து, தொலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை செலவிடுகிறார்கள். உடல் செயல்பாடு இல்லாதது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில், கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான ஆய்வை வெளியிட்டனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடு செய்தால் இதய நோய் அபாயத்தை 61 சதவீதம் […]

பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். ரேஷன் கடை பாமாயிலில் அதிக கொழுப்பு இருப்பதால் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடும். உடல் எடை கூடுதல், கொழுப்பு சத்து அதிகரிப்பு, இதயம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பயன்படுத்தும் போது அதை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது […]

சில வகை தானியங்களை வேக வைக்காமல் சாப்பிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அரிசி அப்படி இல்லை. அரிசியை வேக வைக்காமல் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. இதற்கு வேக வைக்காத அரிசியில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம். இங்கு அரிசியை வேக வைக்காமல் சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து இனிமேல் உஷாராகிக் கொள்ளுங்கள். மற்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை விட அரிசியில் செல்லுலோஸ் […]

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவது தான். உடல் சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய் சுத்தமும் அவசியம். உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். தற்போது கடைகளில் பலவகையான டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது உங்களது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். டூத்பேஸ்ட்களில் வேம்பு, […]

இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, வேர்க்கடலையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வேர்க்கடலையில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள் ஆகும். அதேபோல், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டாலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் […]

இப்போதெல்லாம், பலர் தைராய்டு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இது சிலருக்கு எடை இழப்பை ஏற்படுத்தினாலும், மற்றவர்களுக்கு அதிக எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு, தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக உற்பத்தி செய்யப்படுவதால் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு தேங்கி, எடை வேகமாக அதிகரிக்கிறது. பலர் இந்தப் பிரச்சனையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் சில முக்கியமான தவறுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பையும் […]

நமது உடல் வெப்பம் அல்லது உஷ்ணமாக இருந்தால், அதை உடல் சூடு என்று சொல்வார்கள். பொதுவாக, மனித உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 37°C (98.6°F) ஆகும். இந்த வெப்பநிலை அதிகமாகும் போது, “உடல் சூடு” என்கிறோம். உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சி, அதிக உடல் உழைப்பு, வெப்பமான வானிலை அல்லது வெப்பமான சூழலில் இருப்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதது ஆகியவை காரணமாக […]

தேர்வுக்காக அல்லது வேலைக்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கலாம். அல்லது நீங்கள் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் தூங்காமல் இருக்கலாம். இப்படி எந்த காரணம் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுவான விளைவு நிகழும். இதனால் உங்கள் உடல் சோர்ந்து போகும், மூளை சீராக செயல்படாது, மனநிலை மோசமாகி, கோபம், சலிப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். நீண்ட பயணத்திற்கு போகும் முன் நம் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்வதுபோல், நாம் தூக்கத்தையும் […]