இன்றைய நவீன உலகில் அதீத வேலைப்பளு, சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை நமது அந்தரங்க வாழ்க்கையை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றன. பாலியல் ஆரோக்கியத்தைப் பேணவும், மன அழுத்தத்தை விரட்டவும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கிய வாழ்வியல் மாற்றங்களை இங்கே காண்போம். நமது பாலியல் ஆர்வத்தை தீர்மானிப்பதில் நாம் உட்கொள்ளும் உணவிற்கு முக்கியப் பங்குண்டு. வைட்டமின் சி, டி, ஈ மற்றும் தாதுக்கள் நிறைந்த சரிவிகித […]

மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக, சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் (Stem Cell) சிகிச்சையின் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை (Type 2 Diabetes) முற்றிலும் குணப்படுத்தும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சை : பொதுவாக டைப் 2 நீரிழிவு […]

கோடைக்காலத்தின் கடும் வெப்பம் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்தத்தின் கையிருப்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வருவது வரவேற்கத்தக்கது. எனினும், கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்பவர்கள் சில அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ரத்த தானம் செய்வதற்கு முன்பாகவும், செய்த பின்னரும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். எனவே, […]

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கும் பெரும் கவலையை தரும் விஷயமாக மாறியுள்ளது. உடல் எடையை குறைக்க ஜிம், கடுமையான உடற்பயிற்சிகள் எனப் பலரும் மல்லுக்கட்டி வரும் நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 38 கிலோ எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைப்பது குறித்துப் பேசிய குஷ்பு, “எடையைக் குறைப்பது எளிது, ஆனால் அந்த எடையைத் தக்கவைப்பதுதான் சவாலானது” என்கிறார். இதற்காக […]

பொதுவாக, மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.. இந்த விஷயத்தில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.. ஆனால், இப்போதெல்லாம், மது அருந்தாதவர்களிடமும் கல்லீரல் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.. அவர்கள் மது அருந்தாவிட்டாலும் கூட.. கல்லீரல் எவ்வாறு சேதமடைகிறது என்று தெரியாததால் பலர் குழப்பமடைகிறார்கள். ஆரம்பத்தில், கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகள் லேசானவை.. எனவே மக்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். பின்னர்.. படிப்படியாக கல்லீரல் சேதமடைகிறது.. அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.. […]

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. கோடையில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து குழந்தை நல ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் லேகா ஸ்ரீதரன் வழங்கும் ஆலோசனைகளை இங்கே காண்போம். வெயில் காலத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது உடலின் நீர்ச்சத்தைப் பராமரிப்பதாகும். இது குறித்துப் பேசும் மருத்துவர் […]

காலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்களும் அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த அவசரத்தில், பலர் சரியான காலை உணவைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குக் கிடைக்கும் எதையும் சாப்பிடுகிறார்கள் அல்லது காபி மற்றும் தேநீரைத் திருப்திப்படுத்துகிறார்கள். ஆனால் இரவில் 7-8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகு, நம் வயிறு முற்றிலும் காலியாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் முதலில் சாப்பிடுவது நமது செரிமானம், ஆற்றல் அளவுகள் மற்றும் நாள் முழுவதும் நமது […]

இன்றைய அவசர உலகில், 6 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்காமல் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாக ‘ஒற்றைத் தலைவலி’ (Migraine) உருவெடுத்துள்ளது. உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் இந்த வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிடுகின்றன. தலையின் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கும் இந்த வலி, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒற்றை […]

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சிறுநீரகக் கோளாறுகள் முதல் சரும நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில், கோடை வெயிலின் பிடியில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சித்த மருத்துவர் காமராஜ் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கோடைக்காலத்தில் வியர்க்குரு, தேமல், உடல் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் தோன்றுவது இயல்பானது. இதுமட்டுமன்றி, பலருக்குக் மலச்சிக்கல், மூல […]

கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் வெயில் மனிதர்களை மட்டுமன்றி, நாம் ஆசையாக வளர்க்கும் செடிகளையும் வாட்டி வதக்கிவிடும். சூரிய வெப்பத்தால் மண்ணிலுள்ள ஈரப்பதம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, மண் வறண்டு வெடிப்புகள் ஏற்படுவது செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். இத்தகைய சூழலில், வீணாக கீழே தூக்கி எறியும் தேங்காய் மட்டைகளை வைத்து, கோடையிலும் செடிகளைத் தளதளவெனச் செழிப்பாக வளர்க்கும் எளிய இயற்கை தொழில்நுட்பம் குறித்து இங்கே காண்போம். மண்ணை தயார் செய்யும் முறை : முதலில் […]