டெல்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக தந்தையின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென மாணவி மீது ஆசிட் ஊற்றிவிட்டு […]

ஹரியானாவின் கைதல், கர்னல் மற்றும் குருக்ஷேத்ரா மாவட்டங்களைச் சேர்ந்த பலர், கைவிலங்குகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர், இது சட்டவிரோத கழுதை வழிகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைவதன் அபாயங்கள் மற்றும் அதிக செலவுகளைக் காட்டுகிறது. அவர்களில் பலர் சட்டவிரோதமாக நுழைய அல்லது தங்க முயற்சிக்கும்போது பிடிபட்ட பின்னர் அமெரிக்காவில் உள்ள தடுப்பு மையங்களில் பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்…. 35 ஆண்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக […]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஒரு சதித்திட்டம் தீட்டியதாகவும், ஆனால் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அதை முறியடித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. முதலில் சமூக ஊடகங்களில் பரவிய இந்த தகவகள், இப்போது பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.. பிரதமர் மோடியைக் குறிவைக்க அமெரிக்க உளவுத்துறை ஒரு திட்டத்தை வகுத்திருந்ததாகவும், ஆனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த உளவுத்துறை முயற்சியின் மூலம் அது முறியடிக்கப்பட்டது […]

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) மீது அளித்த புகார், காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரில், “சித்ரதுர்கா டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் கடிலிங்கப்பா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்குப் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் திலக் நகரைச் சேர்ந்தவர் 35 வயதான சல்மா. சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு இவரது கணவர் காலமானார். இதனால், சல்மா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இச்சமயத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் சல்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு பண உதவி செய்து நெருங்கிப் பழகிய சுப்பிரமணியுடன், சல்மாவுக்கு […]

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.. நடைமுறையின் கீழ் வரும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியலில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.. அரசியல் கட்சிகள் பட்டியல்களின் தரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் […]

ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியைப் பார்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு பயணிக்கும் எழும் கேள்வி என்னவென்றால், அதை இழுத்தால் என்ன நடக்கும் என்பதுதான். ஆனால் இது வேடிக்கையாக இல்லை. இது ரயில் பயணிகள், பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தும். எந்த காரணமும் இல்லாமல் ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியை இழுத்தால், நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதுகுறித்து பார்க்கலாம்.. ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலி 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பொறியாளர் ஜார்ஜ் […]

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக மேற்கு வங்கம், டெல்லி மற்றும் தெலங்கானா தவிர அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நாளான நவம்பர் 3 ஆம் தேதி அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா […]

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]

குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே சிறுமி ஒருவரிடம் முதியவர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம், செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா பஜார் பகுதியில் நடந்துள்ளது. அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமியை அருகில் அழைத்த முதியவர், அவர்களுடன் விளையாடுவது […]