உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல்களின்படி, ஒரு கணவர், தனது மனைவிக்கு குடும்ப உறவினர் ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் ஆழமடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சியில் இருந்த கணவர், ஒரு […]

இந்தியாவில் அடையாளச் சரிபார்ப்பு முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது.இந்திய தனித்துவ அடையாள ஆணையmaana UIDAI (Unique Identification Authority of India) விரைவில் ஆதாரை ஆஃப்லைனில் பயன்படுத்தும் முறையை ஒரே மாதிரியாக்கத் திட்டமிட்டு வருகிறது. இது, அடையாளத்தை சரிபார்ப்பதில் ஒரு பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. எங்கு பயன்படுத்தப்படும்? இந்த புதிய முறை அமலுக்கு வந்த பின், ஹோட்டல்கள், குடியிருப்பு / கேட்டட் கம்யூனிட்டிகள், உணவகங்கள், தேர்வுக் கூடங்கள், சிறப்பு […]

ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து சிபிஎஸ்இ (CBSE) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், பள்ளியின் பாதுகாப்பு விதிமுறைகளில் பெரும் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது.. மேலும் இந்த சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. உயிரிழந்த மாணவி தொடர்ந்து சக மாணவர்களின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி […]

ஃபரீதாபாத் அல் ஃபலாஹ் மருத்துவ கல்லூரி மருத்துவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் வெளிநாட்டு நபர் ஒருவர், செங்கோட்டை வெடி குண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு குண்டு தயாரிக்கும் முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய உமர் நபியின் சக ஊழியரான முஜம்மில் அகமது கனாய் (Muzammil Ahmad Ganai), வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாத செயலை உத்தரவிடும் நபரிடம் இருந்து இருந்து குறியாக்கப்பட்ட (encrypted) […]

திருமணமான ஒரு பெண்ணுடன், அவருடைய சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால், அது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய உறவை ஒரு காரணமாக காட்டி, சம்பந்தப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவோ அல்லது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. […]

இன்று காலை வங்கதேசத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்க அதிர்வு காலை 10.08 மணி முதல் 10.10 மணி வரை சில விநாடிகள் உணரப்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கொல்கத்தா, மல்டா, நாதியா, கூச் பெஹார் மற்றும் பல மாவட்டங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தக்ஷிண் மற்றும் உத்தர் தினாஜ்பூர் பகுதிகளிலும் அதிர்வு […]

இந்திய விமானப்படை கிழக்கு லடாகில் நியோமா (Nyoma) விமானத்தளத்தை திறந்து வைத்துள்ளது. 13,700 அடி உயரத்தில், இது உலகில் இயங்கும் உயரமான போர்விமானத் தளம் ஆகும். இந்தத் தளம் இந்தியாவின் உயர்ந்த இடங்களில் விமான சக்தியை பெரிதாக மேம்படுத்தும், மேலும் எல்லை கட்டுப்பாட்டு வரம்பு (LAC) அருகே விரைவான நடவடிக்கைக்கு உதவும். நியோமா விமானத்தளத்தின் முக்கிய விவரங்கள் ஏர் சீப் மார்ஷல் A.P. சிங் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் […]

அடுத்த 5 ஆண்டுகளில் 1,500 கிமீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலீடுகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், சாலைக் கட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களை வலுப்படுத்தவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் குறித்த முன்மொழிவின் ஒரு பகுதியாக ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் மேனஜர்ஸ் என்ற தனியார் […]

உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிப் போட்டிகளில் (World Boxing Cup Finals) இந்திய வீராங்கனைகள் பதக்க பட்டியலில் சாதனை படைத்துள்ளனர். இந்திய அணி, மொத்தம் 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது. குறிப்பாக, star pugilist-ஆக விளங்கும் நிகத் ஜரீன் (Nikhat Zareen) தலைமையில், இந்தியப் பெண்கள் குத்துச்சண்டை அணி மட்டும் 7 தங்கப் பதக்கங்களை அள்ளியது. போட்டியில் உள்ள அனைத்து 20 எடைப் […]

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாகவும், சர்வதேசப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் சரிவு : சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு (28 கிராம்) $7.76 குறைந்து $4,073 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், வெள்ளியின் […]