சமீபகாலமாக இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்களைத் தளமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் புதிய மோசடிகளை அரங்கேற்றி பணம் சம்பாதிக்கின்றனர். எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் செல்பவர்கள், இறுதியில் தன்னிடம் உள்ளதையும் இழந்துவிடுகின்றனர். சமீபத்தில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு விசித்திரமான வேலைவாய்ப்பு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘குழந்தை இல்லாத பெண்களைக் கருவுறச் செய்தால், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை […]

ரயில்வே ஊழியர் ஒருவர் இறந்த பின், அவர் தத்தெடுத்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தெற்கு கிழக்கு ரயில்வே தாக்கல் செய்த மனுவை, ஒடிசா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்சித் கிருஷ்ண ஸ்ரீபாத் மற்றும் சிபோ சங்கர் மிஷ்ரா அமர்வு “இந்து மதத்தில் மகன் இல்லாதவர் சொர்க்கம், முக்தி, […]

ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு […]

இந்திய அரசு 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி […]

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விபத்துகளை குறைக்கும் புரட்சிகர நடவடிக்கையாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும் (Vehicle-to-Vehicle – V2V) தொழில்நுட்பத்தை விரைவில் அமல்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். V2V தொழில்நுட்பம் என்றால் என்ன? இந்த முறையில், அருகில் செல்லும் வாகனங்களின் வேகம், இருப்பிடம், திடீர் வேக மாற்றம், திடீர் பிரேக், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் உள்ள வாகனங்கள் போன்ற தகவல்கள் நேரடியாக […]

சர்வதேச அரசியல் களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்து இருப்பதை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா மறைமுகமாக உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், […]

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான எச்டிஎஃப்சி (HDFC Bank), தனது சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) வட்டி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது வட்டி விகிதத்தை (Repo Rate) 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைத்ததை தொடர்ந்து, நாட்டின் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப எச்டிஎஃப்சி வங்கியும் இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டின் […]

நாடாளுமன்றத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சிகரெட் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி உயர்வு ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சந்தையில் சுமார் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை, புதிய வரி விதிப்பிற்குப் பிறகு சுமார் 72 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. இந்த அதீத விலை உயர்வு, பொதுமக்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கவும், ஆரோக்கியமான […]

காதலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்தக் கேரளத் தம்பதியினர் நிரூபித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பதின்ம வயதில் தொடங்கிய ஒரு காதல், இரு குடும்பங்களின் பிள்ளைகள் முன்னிலையில் திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முண்டக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தனது பதின்ம வயதிலேயே ரஷ்மி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார். ஆனால், அவளிடம் சொல்லப் பயந்து தனது காதலை மனதிற்குள்ளேயே […]

பாஜக தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டு, 2025 ஏப்ரலில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் எவ்வளவு பதற்றமடைந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை கடுமையாகக் குலுக்கியதாகவும், அதனால் அவர்கள் அமெரிக்க அரசிடம் போர் நிறுத்தம் கோரி மன்றாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் மால்வியா வெளியிட்ட தகவல் […]