இந்திய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருடன் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.. இதனால் அந்த ஓட்டுநர் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஓட்டுநரின் எதிர்பாராத மொழித் திறன்கள் மற்றும் பார்வையாளர்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் அவரது திறனைக் கண்டு நெட்டிசன்களை ஈர்க்கிறது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணி தனது இன்ஸ்டாகிராம் […]

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2023ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டவர்கள் அரவிந்த் – நந்தினி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற இளைஞருடன் நட்பு உருவானது. அன்குஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நந்தினி பங்கேற்ற வீடியோக்களை பார்த்து அரவிந்த் ஆத்திரமடைந்தார். மேலும், சமீபத்தில், நந்தினி தனது நண்பர்களுடன் ஆட்டோவில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற கணவர் அரவிந்த், அவர்களை வழிமறித்து […]

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தற்போது 349 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பதவிகள் மற்றும் தகுதிகள் : இந்தப் பணியிடங்கள் டிஜிட்டல் பேங்கிங், டேட்டா அனலிஸ்ட், ஐ.டி. செக்யூரிட்டி, […]

EPFO | நீங்கள் மாத ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை உங்கள் நிறுவனமும் சேர்த்து பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக் காலத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும். நிறுவனம் செலுத்தும் தொகை 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் […]

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஷேக் அம்ஜத் என்பவர், குடும்ப பிரச்சனையால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து […]

சுமார் 375 பொருட்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருவதால், சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை இன்று முதல் விலை குறையும். அந்தவகையில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு மிகப்பெரிய ஜிஎஸ்டி குறைப்பை அறிவித்துள்ளது. “புற்றுநோய், அரிய நோய்கள் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளன. பல மருந்துகள் 12 […]

சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில், தற்போதைய நான்கு வகை வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன: 5% – அத்தியாவசியப் பொருட்கள்18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்40% – பிற பொருட்கள் (தூயிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் […]

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. மேலும் டபுள் போனஸாக, ஜூலை மாதத்தில் […]

ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ரயில் பயணத்தின் போது, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும், ரயில்களில் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில் ஆகும். இது பயணிகளுக்கு வசதியாக ரயில்வே வளாகத்தில் விற்கப்படுகிறது. […]