சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் காதல், சில சமயங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமாரி (37). அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவர், தனது கணவரை விவாகரத்து செய்த பின் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பர்மா நகரைச் சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவருடன் முகேஷ் குமாரிக்கு பேஸ்புக் மூலம் நட்பு […]

வாக்காளர் நீக்க மோசடிகளில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.. அவரின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. ராகுல் காந்தி தவறாகக் கருதியது போல, எந்தவொரு வாக்காளரையும் […]

ஆளும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தேர்தல் நடக்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாக்குத்திருட்டு தொடர்பாக 100 சதவீத ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் முன் வைக்கிறேன். வாக்குத் திருட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாத்து […]

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், தனது செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளான். இதன் மூலம், அவனுக்குப் பல வாலிபர்கள் மற்றும் திருமணமான ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம், நாளடைவில் சிறுவனுக்குப் பெரும் துன்பத்தைத் தந்துள்ளது. அந்த செயலி மூலம் அறிமுகமானவர்கள், சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். முதலில் இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். பின்னர், அங்குள்ள விடுதிகள் மற்றும் […]

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பலரும் வாழ்ந்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளுக்காக மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்தும் வருகின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து […]

ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான பெண் மருத்துவர் ஒருவர், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற அந்த மருத்துவர், கடந்த 5ஆம் தேதி தனது மொபைலுக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை எடுத்துப் பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், பெங்களூரு போலீஸ் சீருடையில் இருந்ததோடு, உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரைகள் கொண்ட போலி ஆவணங்களைக் காட்டி மிரட்டியுள்ளார். […]

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, லக்னோவிலிருந்து பரேலிக்கு சென்ற ரயில் மத்தியா மந்திர் அருகே வந்தபோது, ​​ஒரு பயணி ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசினார். இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர்வாசிகள், நோட்டுகளை சேகரிக்க விரைந்தனர். இந்த சம்பவம் ஃபரித்பூர் பகுதியில் நடந்தது. ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ‘பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து’ என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரேவ் பார்ட்டிகள் என்ற பெயரில், போதைப்பொருள் மற்றும் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், ராய்பூரில் செயல்பட்டு வரும் சில பிரபல கிளப்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து, […]