இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கும், இந்தியா பிளாக் வேட்பாளர் B சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. CP ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த பாஜக தலைவர். ரெட்டி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. போட்டி ‘தெற்கு vs தெற்கு’. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இந்தநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் நாடாளுமன்ற […]

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான […]

தி லான்செட் நீரிழிவு நோய் மற்றும் நாளமில்லா சுரப்பியியல் இதழில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 44% பேர் , 2023 ஆம் ஆண்டில் கண்டறியப்படாமல் இருந்தனர். இதனால், ஆரம்பகால தலையீடு இல்லாததால் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இது 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முன்னேற்றமாகும், அப்போது சுமார் 53% பேர் கண்டறியப்பட்டனர், இது நீரிழிவு […]

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் சிக்கந்திரா ராவ் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தச் சிறுமி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மிதந்துள்ளது. […]

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது. இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய […]

சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.. அந்த வீடியோவில் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் சக பயணிகள் முன்னிலையில் ஒரு ஜோடி செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… அந்த வீடியோவில் கிட்டத்தட்ட இந்த ஜோடி ரயிலை ஒரு ஓயோ ரூமாக மாற்றியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.. ஒரு பெண்ணின் மேல் படுத்திருக்கும் […]

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழு எப்போது உருவாக்கப்படும் என்று நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த செயல்முறை நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகலாம். இதனிடையே, அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.. அகவிலைப்படி உயர்வு (DA) விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வு 1.2 […]